Published : 25 Sep 2025 07:02 AM
Last Updated : 25 Sep 2025 07:02 AM

இலங்கைக்கு கடத்துவதற்காக காரைக்காலில் 275 கிலோ கஞ்சாவை பதுக்கியவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

காரைக்கால்: இலங்​கைக்கு கடத்​து​வதற்​காக காரைக்​காலில் 275 கிலோ கஞ்​சாவை பதுக்கி வைத்​திருந்​தவரின் வீட்​டில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று சோதனை நடத்​தினர். காரைக்​காலில் கடந்த ஜூலை 16-ம் தேதி போலீ​ஸார் நடத்​திய வாகன சோதனை​யின்​ போது, ஒரு காரில் கடத்​தப்​பட்ட 26 கிலோ கஞ்​சாவை பறி​முதல் செய்​து, அதில் பயணித்த திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​ குடியைச் சேர்ந்த திலீப்​(38), கடலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த குமர​வேல்​(44) ஆகி யோரை கைது செய்​தனர்.

மேலும், காரைக்​கால் மாவட்​டம் கீழ​கா​சாக்​குடி​யில் குமர​வேல் வாடகைக்கு தங்​கி​யிருந்த வீட்​டில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்​பிலான 275 கிலோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது.

தொடர்ந்து நடத்​திய விசா​ரணை​யின் அடிப்​படை​யில், ஆந்​தி​ரா​வில் இருந்து கஞ்சா வரவழைத்த ஆம்​பூரைச் சேர்ந்த கிஷோர் குமார்​(37) மற்​றும் கஞ்​சாவை கடத்​திச் செல்​வதற்​காக காரைக்​கால் கடற்​கரை பகு​திக்கு வந்த இலங்​கை​யைச் சேர்ந்த 2 பேர் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர்.

அதிகாலை முதல் சோதனை: இதுதொடர்​பாக புதுச்​சேரி போலீ​ஸார் மற்​றும் மத்​திய விசா​ரணை அமைப்​பினர் தொடர்ந்து விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், சென்​னை​யில் இருந்து உதவி இயக்​குநர் தலை​மையி​லான 4 பேர் கொண்ட அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று அதி​காலை காரைக்​காலுக்கு வந்​து, கீழ​கா​சாக்​குடி​யில் குமர​வேல் தங்​கி​யிருந்த வீட்​டில் சோதனை நடத்​தினர்.

தொடர்ந்​து, அப்​பகு​தி​யில் உள்​ளவர்​களிட​மும் விசா​ரணை மேற்​கொண்​டனர். அமலாக்​கத் துறை​யினர் விசா​ரணை நடத்​தி​யதை காரைக்​கால் போலீ​ஸார் உறு​தி​செய்த நிலை​யில், சோதனை குறித்த விவரங்​கள் தெரிவிக்​கப்​படவில்​லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x