Published : 24 Sep 2025 06:20 AM
Last Updated : 24 Sep 2025 06:20 AM

கோயம்பேட்டில் காய்கறி கடை ஊழியரிடம் ரூ.45.70 லட்சம் வழிப்பறி: விரட்டி சென்றபோது பைக்கை விட்டுச் சென்ற கொள்ளையர்கள்

சென்னை: கோ​யம்​பேட்​டில் காய்​கறி வியா​பாரி​யிடம், கத்தி முனை​யில் ரூ.45.70 லட்​சம் வழிப்​பறி செய்​யப்​பட்ட விவ​காரம் குறித்து, கோயம்​பேடு போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். சென்​னை, நெற்​குன்​றம், ஜெயலட்​சுமி நகரை சேர்ந்​தவர் சாந்​தகு​மார் (42). இவர், கோயம்​பேடு சந்​தை​யில், காய்​கறி மொத்த வியா​பாரம் செய்​கிறார். இவரது கடை​யில் சின்​மயா நகர், 3-வது தெருவை சேர்ந்த நாராயணன் (35) என்​பவர் வேலை செய்​கிறார்.

இவர், சாந்​தகு​மாரின் வாடிக்​கை​யாளர்​களான சிறு வியா​பாரி​களுக்கு காய்​கறிகளை தின​மும் விநி​யோகம் செய்து விட்​டு, மாலை​யில் அதற்​கான பணத்தை வசூல் செய்து உரிமை​யாளரிடம் கொடுப்​பதை வழக்​க​மாக கொண்​டுள்​ளார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு சாந்​தகு​மார், அவரது ஊழிய​ரான நாராயணனிடம் கொத்​த​வால்​சாவடி சந்​தைக்​குச் சென்று அங்கு கடை நடத்தி வரும் வாசிம் என்​பவரிட​மிருந்து ரூ.45.68 லட்​சத்தை வாங்கி வரு​மாறு அனுப்பி வைத்​துள்​ளார்.

இதையடுத்​து, நாராயணன் இருசக்கர வாக​னத்​தில் கொத்​த​வால்​சாவடி சென்று வாசிமிடம் இருந்து பணத்தை பெற்​றுக் கொண்டு பாரி​முனை வழி​யாக கோயம்​பேடு நோக்கி சென்று கொண்​டிருந்​தார். கோயம்​பேடு சந்​திப்பு அருகே வரும் போது பின்​னால் இருசக்கர வாக​னத்​தில் வந்த அடை​யாளம் தெரி​யாத இரு​வர், நாராயணனின் இருசக்கர வாக​னத்​தின் மீது மோதி அவரை கீழே தள்​ளினர்.

பின்​னர், கத்​தியை காட்டி மிரட்டி நாராயணன் கையில் இருந்த ரூ.45.70 லட்​சத்தை பறித்து தப்​பினர். இருப்​பினும், நாராயணன் தட்டு தடு​மாறி எழுந்து கொள்​ளை​யர்​களை இருசக்கர வாக​னத்​தில் விரட்​டி​னார். மதுர​வாயல் எஸ்​பிபி கார்​டன் அருகே தப்​பிய கொள்​ளை​யர்​களை மடக்கி பிடித்து கீழே தள்​ளி​னார். கோபம் அடைந்த அவர்​கள் எங்​களையே பிடிக்க முயல்​கிறா​யா? என தங்​களிடம் இருந்த அரி​வாளால் வெட்ட பாய்ந்​தனர்.

இதையடுத்​து, திருடன்.. திருடன் என நாராயணன் கத்​தி​னார். அவரின் அலறல் சத்​தம் கேட்டு அந்த வழி​யாக வந்த வாகன ஓட்​டிகள் திரண்​டனர். இதையடுத்​து, கொள்​ளை​யர்​கள் இரு​வரும், அவர்​கள் வந்த இருசக்கர வாக​னத்தை அங்​கேயே போட்டு விட்டு பணத்​துடன் தப்​பினர்.

இதையடுத்​து, பணம் வழிப்​பறி செய்​யப்​பட்​டது குறித்து கோயம்​பேடு காவல் நிலை​யத்​தில் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, கொள்​ளை​யர்​கள் விட்​டுச் சென்ற இருசக்கர வாக​னத்தை பறி​முதல் செய்​து, அதை அடிப்​படை​யாக வைத்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x