Published : 24 Sep 2025 06:48 AM
Last Updated : 24 Sep 2025 06:48 AM

காதல் தகராறில் இளைஞர் கொலை: இளம் பெண்ணின் தந்தை, தம்பி உட்பட 4 பேர் கைது

தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் திருச்​செந்​தூர் அருகே ஆலந்​தலை சுனாமி நகர் குடி​யிருப்பை சேர்ந்த முரு​கன் மகன் மணி​கண்​டன் (24). எலெக்ட்​ரீஷிய​னான இவர், திருச்​செந்​தூரை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து வந்​தார். இவர்​கள் இரு​வரும் 4 மாதங்​களுக்கு முன்பு மாய​மாகினர்.

தனது மகளைக் காண​வில்லை என பெண்​ணின் தந்தை திருச்​செந்​தூர் கோயில் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதைத் தொடர்ந்து போலீ​ஸார் பெண்ணை மீட்டு பெற்​றோரிடம் ஒப்​படைத்​தனர். இதுதொடர்​பாக மணி​கண்​ட​னுக்​கும், அந்த பெண்​ணின் குடும்​பத்​துக்கும் இடையே முன்​விரோதம் இருந்துவந்​தது.

இந்​நிலை​யில், மணி​கண்​டன் நேற்று முன்​தினம் கொலை செய்​யப்​பட்​டார். இது தொடர்​பாக பெண்​ணின் தந்​தை, தம்பி உள்​ளிட்ட 5 பேர் மீது திருச்​செந்​தூர் தாலுகா போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர். இதில் பெண்​ணின் தந்தை நட்​டார் (48) மற்​றும் தம்பி உள்​ளிட்ட 3 சிறு​வர்​கள் என 4 பேரை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x