Published : 23 Sep 2025 06:12 AM
Last Updated : 23 Sep 2025 06:12 AM

கொளத்தூரில் 17 வயது சிறுவன் அடித்து கொலை: சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

சென்னை: ​கொளத்​தூரில் 17 வயது சிறு​வன் அடித்து கொலை செய்​யப்​பட்ட வழக்​கில், சிறு​வர்​கள் உள்பட 6 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். கொளத்​தூர் முரு​கன் நகர் 2-வது பிர​தான சாலைப் பகு​தி​யைச் சேர்ந்​தவர் வீரமணி. இவர், சென்னை மாநகர பேருந்து நடத்​துந​ராக பணிபுரி​கிறார். இவரது மகன் ஹர்​ஷ்வர்​தன் (17). 10-ம் வகுப்பு வரை படித்​திருக்​கும் ஹர்​ஷ்வர்​தன், கொளத்​தூர், விவி நகரில் ஒரு மெக்​கானிக் கடை​யில் வேலை செய்து வந்​தார். இவருக்​கும், கொளத்​தூரைச் சேர்ந்த சிறு​வர்​கள் சிலருக்​கும் முன்​விரோதம் இருந்​தது.

இதில், ஹர்​ஷ்வர்​தன் மொபெட்​டில் வேக​மாக சென்​றது தொடர்​பாக ஏற்​பட்ட வாக்​கு​வாதம், நாளடை​வில் இரு தரப்​பினருக்​கும் இடையே பகை​யாக மாறியது. இந்​நிலை​யில், ஹர்​ஷ்வர்​தன், கடந்த 18-ம் தேதி தனது நண்​பருடன் ஒரு மொபெட்​டில் கொளத்​தூர், பஜனை கோயில் தெரு வழி​யாக சென்​றுள்​ளார். அப்​போது, அங்கு நின்று கொண்​டிருந்த எதிர் தரப்​பினருக்​கும், ஹர்​ஷ்வர்​தன் தரப்​புக்​கும் இடையே வாய்த் தகராறு ஏற்​பட்டு முற்​றியது.

இதையடுத்​து, இரு தரப்​பினரும் ஒரு​வர் மீது மற்​றொரு​வர் தாக்கி உள்​ளனர். அப்​போது, ஹர்​ஷ்வர்​தன் நண்​பர் அங்​கிருந்து தப்​பியோடி​விட்​டார். ஆனால், 6 பேர் கொண்ட எதிர் தரப்​பிடம் ஹர்​ஷ்வர்​தன் தனி​யாக சிக்​கிக் கொண்​டுள்​ளார். இதையடுத்​து, உருட்​டுக் கட்​டை​யால் தாக்​குதலுக்கு உள்​ளான ஹர்​ஷ்வர்​தன் அங்​கேயே மயங்கி விழுந்​தார்.

பின்​னர், அவர் ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்ட நிலை​யில், நேற்று முன்​தினம் உயி​ரிழந்​தார். இதுகுறித்​து, ராஜமங்​கலம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, அரும்​பாக்​கத்​தில் உள்ள ஒரு கல்​லூரி​யில் படிக்​கும் பிகாம் முதலா​மாண்டு படிக்​கும் கொளத்​தூரைச் சேர்ந்த மாணவர் மற்​றும் 3 சிறு​வர்​கள் உள்பட 6 பேரை கைது செய்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x