Published : 23 Sep 2025 06:41 AM
Last Updated : 23 Sep 2025 06:41 AM

சென்னையில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: நுங்​கம்​பாக்​கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலு​வல​கம், வானிலை ஆய்வு மையம் ஆகிய மத்திய அரசு நிறுவனங்கள், திரு​வல்​லிக்​கேணி சுவாமி சிவானந்தா சாலை​யில் உள்ள பத்​திரிகை தகவல் அலு​வல​கத்​துக்​கும் (பிஐபி) நேற்று வெடிகுண்டு மிரட்​டல்விடுக்​கப்​பட்​டிருந்​தது.

அங்​கெல்லாம் சோதனை நடத்​தப்​பட்​ட​தில், சந்​தேகப்​படும்​படி​யான எந்த பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. எனவே இது புரளி என தெரிய ​வந்தது.

வானிலை ஆய்வு மையத்​துக்கு பஞ்​சாப் முதல்​வர் பகவந்த் மான் பெயரிலும், ஜிஎஸ்டி மற்​றும் பிஐபி அலு​ல​கத்​துக்கு தமிழக துணை முதல்​வர் உதயநிதி பெயரிலும் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது. இந்த மிரட்​டல் குறித்து நுங்​கம்​பாக்​கம் மற்​றும் திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x