Published : 23 Sep 2025 07:49 AM
Last Updated : 23 Sep 2025 07:49 AM

ஓசூர் | ஆதரவற்றோர் காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: விடுதி காப்பாளர் உட்பட 5 பேர் கைது

கைது செய்யப்பட்ட ஷாம் கணேஷ், ஜோஸ்பின், இந்திரா, செல்வராஜ், நாதமுரளி.

ஓசூர்: ஓசூரில் ஆதரவற்றோர் காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பாளர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். ஓசூரில் இயங்கிவரும் ஆதர​வற்​றோர் காப்​பகத்​தில் மாணவ, மாணவி​கள் 33 பேர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 9 வயது மாணவிக்கு ஒரு வாரத்​துக்கு முன்​னர் உடல்​நலம் பாதிக்கப்​பட்​டது.

இதையடுத்​து, மருத்​து​வமனைக்கு சிகிச்​சைக்கு அழைத்​துச் சென்​ற​போது, மாணவி பாலியல் தொல்​லை​யால் பாதிக்​கப்​பட்​டிருப்​பது தெரிந்​தது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்​தைகள் நல பாதுகாப்பு குழு​வினர் விசா​ரணை நடத்தினர். இதில், மாணவி பாலியல் துன்புறுத்​தலுக்கு ஆளானது உறுதி செய்​யப்​பட்​டது.

இச்​சம்​பவம் வெளி​யில் தெரி​யாமல் இருக்க கட்​டப்​பஞ்​சா​யத்து நடந்​ததும் தெரிய​வந்​தது. மேலும், இதுதொடர்​பாக ஓசூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, காப்​பாளர்ஷாம் கணேஷை (63) போக்சோ சட்​டத்​தின் கீழும், கட்​டப்​பஞ்​சா​யத்து செய்த ஷாம் கணேஷின் மனைவிஜோஸ்​பின் (61), காப்பக ஆசிரியை இந்​திரா (36) மற்​றும் செல்​வ​ராஜ் (63), நாத​முரளி (37) ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர். விசா​ரணை​யில், காப்​பகத்​தின் உரிமம் புதுப்​பிக்​கப்​ப​டா​மல் செயல்​பட்​டதும் தெரியவந்​தது. இதற்கிடையே இக்​காப்​பகத்​தில் இருந்த மாணவ, மாணவி​கள் வேறு காப்​பகத்​துக்கு மாற்​றப்​பட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x