Published : 19 Sep 2025 06:55 AM
Last Updated : 19 Sep 2025 06:55 AM

மயிலாடுதுறையில் செல்போன் செயலி மூலம் மாணவியை ரகசியமாக கண்காணித்தவர் கைது

முகமது அப்ரித்

மயிலாடுதுறை: செல்​போன் செயலி மூலம் கல்​லூரி மாண​வி​யின் நடவடிக்​கைகளை ரகசி​ய​மாக கண்​காணித்​தவர் கைது செய்யப்​பட்​டார். மயி​லாடு​துறை பழைய பேருந்து நிலை​யம் அரு​கே​யுள்ள இன்​டர்​நெட் மையத்​தில் பணி​யாற்றி வருபவர் பெரம்​பூர் அகர​வல்​லம் பகு​தி​யைச் சேர்ந்த முகமது அப்​ரித்​(28). அண்​மை​யில், இந்த மையத்​துக்கு பாஸ்​போர்ட் விண்​ணப்​பிப்​ப​தற்​காக வந்த கல்​லூரி மாணவி ஒரு​வரின் செல்​போனில், அவருக்கே தெரி​யாமல் ஒரு செயலியை பதி​விறக்​கம் செய்து கொடுத்​து​விட்​டார்.

தனது செல்​போனில் சந்​தேகத்​துக்​கிட​மான வகை​யில் நோட்​டிபிகேஷன் வரு​வது, விரை​வாக சார்ஜ் குறைவது உள்​ளிட்ட காரணங்​களால் சந்​தேகமடைந்த அந்த மாண​வி, இதுகுறித்து தனது குடும்​பத்​தினரிடம் தெரி​வித்​துள்​ளார். இதையடுத்​து, மயி​லாடு​துறை காவல் நிலை​யத்​தில் மாண​வி​யின் தாயார் அளித்த புகாரின்​பேரில், காவல் உதவி ஆய்​வாளர் அருண்​கு​மார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தி​னார்.

விசா​ரணை​யில், ஒரு செல்​போனில் இருந்து மற்​றொரு செல்​போனை கண்​காணிக்​கக் கூடிய செயலி அந்த மாண​வி​யின் செல்​போனில் பதி​விறக்​கம் செய்​யப்​பட்டு இருப்​பதும், அதன் மூலம் அந்த மாண​வி​யின் செல்​போன் கேமரா மூலம் அவரது செயல்​பாடு​களை அவருக்கே தெரி​யாமல் ரகசி​ய​மாக கண்​காணித்து வந்​ததும், அந்த செயலியை இன்​டர்​நெட் மைய ஊழியர் முகமது அப்​ரித் பதி​விறக்​கம் செய்​ததும் தெரிய​வந்​தது.

மேலும், முகமது அப்​ரித் இதே​போல மேலும் 3 இளம்​பெண்​களின் நடவடிக்​கைகளை​யும் செல்​போன் செயலி மூலம் சட்​ட​விரோத​மாக கண்​காணித்து வந்​துள்​ளதும் தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​து, நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர்.

பொது​மக்​கள் தங்​கள் செல்​போனில் தேவையற்ற மற்​றும் நம்​பகத்​தன்மை இல்​லாத செயலிகளை பதி​விறக்​கம் செய்​வ​தால், அவர்​களின் தனிப்​பட்ட தரவு​கள் தவறாகப் பயன்​படுத்​தப்பட வாய்ப்​புள்​ளது. எனவே, செல்​போனில் புதிய செயலிகளை பதி​விறக்​கம் செய்​யும்​போதும், பிர​வுசிங் செய்​யும்​போதும், அறி​முகம் இல்​லாத நபர்​களிடம் செல்​போனை கொடுக்க நேரிடும் சூழல்​களி​லும் பொது​மக்​கள் கவன​மாக​வும், எச்​சரிக்​கை​யுட​னும் செயல்பட வேண்​டும் என எஸ்​.பி. ஸ்டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார். மேலும், சைபர் குற்​றங்​கள் தொடர்​பான உதவி​களுக்கு 1930 என்ற அவசர உதவி எண்ணை எந்த நேரத்​தி​லும் பொது​மக்​கள் அழைக்​கலாம் எனவும் காவல் துறை தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x