Published : 18 Sep 2025 06:58 AM
Last Updated : 18 Sep 2025 06:58 AM

தெலங்கானா மாநில பெண்ணுக்குச் சொந்தமான ரூ.3 கோடி நிலம் ஆள்மாறாட்டம் மூலம் அபகரிப்பு

ஆள் மாறாட்டம் மூலம் நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்டவர்கள்.

சென்னை: தெலங்​கானா மாநில பெண்​ணுக்​குச் சொந்​த​மான ரூ.3 கோடி மதிப்​புள்ள நிலத்தை ஆள்​மாறாட்​டம் மூலம் அபகரித்​த​தாக 5 பேர் கும்​பலை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். தெலங்​கானா மாநிலம், ஐதரா​பாத்​தில் உள்ள ஹரிதவனம் பகு​தி​யில் வசித்து வருபவர் விஜய​சா​முண்​டீஸ்​வரி (59).

இவருக்கு சொந்​த​மான ரூ.3 கோடி மதிப்​புள்ள காலிமனை வேளச்​சேரி விஜயா நகரில் இருந்​தது. இதை சிலர் போலி ஆவணம் மற்​றும் ஆள்​மாறாட்​டம் மூலம் அபகரித்​து​விட்​டனர். இதுகுறித்து விஜய​சா​முண்​டீஸ்​வரி சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் கடந்த ஜூன் 2-ம் தேதி புகார் தெரி​வித்​தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார். அதன்​படி, அப்​பிரி​வில் உள்ள நில மோசடி புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில் முகப்​பேர் மேற்கு செந்​தமிழ் நகரைச் சேர்ந்த யசோதா (59), அதே பகுதி பள்​ளிக்​கூட தெரு​வைச் சேர்ந்த பழனி (43), அயப்பாக்கம், பவானி நகரைச் சேர்ந்த வனிதா (40), முகப்​பேர் மேற்கு விஜிபி நகரைச் சேர்ந்த மேக​நாதன் என்ற குட்டி (49) ஆகிய 4 பேரும் சேர்ந்து விஜய சாமுண்​டீஸ்​வரிக்கு சொந்​த​மான காலி மனையை ஆள் மாறாட்​டம் மற்​றும் போலி ஆவணங்​கள் மூலம் அபகரித்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, இவர்​கள் 4 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும் மோசடி செய்து அபகரித்த சொத்தை விற்க உதவி​யாக இருந்​த​தாக அயப்​பாக்​கத்​தைச் சேர்ந்த அருணாச்​சலம் (42) என்​பவரும் கைது செய்​யப்​பட்​டார். கைது செய்​யப்​பட்ட 5 பேரும் நீதிமன்றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். கைதான மேக​நாதன் நொளம்​பூர் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் உள்​ளார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x