Published : 17 Sep 2025 06:24 AM
Last Updated : 17 Sep 2025 06:24 AM

காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பாமக முன்னாள் தலைவர் கொலை: கொலையாளியை போலீஸில் ஒப்படைத்த கிராம மக்கள்

செங்கல்பட்டு: செங்​கல்​பட்டு அருகே அன்​புமணி​யின் ஆதர​வாள​ரும் காட்​டாங்​கொளத்​தூர் ஒன்​றிய பாமக முன்​னாள் தலை​வர் கல்​லால் அடித்து கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவம் தொடர்​பாக ஒரு​வரை பொது​மக்​கள் போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர்.

செங்​கல்​பட்​டைஅடுத்த பட்​டர​வாக்​கம், இளந்​தோப்பு பகு​தியை சேர்ந்​தவர் வாசு‌ (47). பாமக​வில் மாவட்ட துணை செயல​ராக உள்​ளார். அன்​புமணி அணியை சேர்ந்த இவர் முன்​னாள் கட்​டாங்​கொளத்​தூர் ஒன்​றிய சேர்​மே​னாக​வும் இருந்​துள்​ளார். தற்​போது மகேந்​திரா சிட்டி பகு​தி​யில் உள்ள தொழிற்​சாலைகளுக்கு கேட்​டரிங் கான்​டி​ராக்ட் மற்​றும் டேங்​கர் லாரி​களில் தண்​ணீர் சப்ளை செய்து வந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று மதி​யம் வாசு இளந்​தோப்பு பகு​தி​யில் தொழிற்​சாலைகளுக்கு தண்​ணீர் எடுக்​கும் கிணறு அரு​கில் அமர்ந்​திருந்​தார். அப்​போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த மாரியப்​பன் (35) என்​பவர் வாசுவை கிரிக்​கெட் ஸ்டெம்ப்​பால் தாக்கி தலை​யில் கல்லை போட்டு கொன்று விட்டு தப்​பிச் செல்ல முயன்​ற​போது வாசு உயி​ரிழந்து கிடப்​பதை கண்ட டேங்​கர் லாரி ஓட்​டுநர் கூச்​சலிட்​டார். இதைத் தொடர்ந்து கிராம மக்​கள் மாரியப்​பனை துரத்தி சென்று கொள்​வாய் ஏரி​யில் மடக்கி பிடித்​தனர்.

இந்த சம்​பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு வந்த செங்​கல்​பட்டு தாலுகா போலீ​ஸார் உடலை மீட்டு செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனைக்கு பிரேத பரிசோதனைக்​காக அனுப்பி வைத்​தனர். காவல்​துறை​யின் தடய​வியல் துறை நிபுணர்​கள் தடயங்​களை சேகரித்​தனர். சம்பவ இடத்தை செங்​கல்​பட்டு காவல் கண்​காணிப்​பாளர் புகழேந்தி கணேஷ் ஆய்வு செய்​தார். இச்​சம்​பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மாரியப்​பனை கைது செய்த செங்​கல்​பட்டு தாலுகா போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

நடவடிக்​கை எடுக்​க கோரிக்கை: கொலை​யாளி மாரியப்​பன் அந்​தப் பகு​தி​யில் செல்​லும் லாரி​களை மடக்கி பணம் கேட்டு மிரட்டி வரு​வ​தாக கூறப்​படு​கிறது. அதே போல் சமீபத்​தில் வாசு அவர்​களின் லாரியை மடக்கி பணம் கேட்டு தகராறு செய்​துள்​ளார். அப்​போது வாசு தரப்​பில் மாரியப்​பனை பிடித்​து உட்​கார வைத்து தாக்​கி​யுள்​ளனர். இதனால், ஆத்​திரமடைந்த மாரியப்​பன், தக்க சமயம் பார்த்து வாசுவை தாக்கி கொலை செய்​துள்​ளார் என்று விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. வரு​வாய்த் துறை, காவல் துறை உயர் அதி​காரி​கள் ஆய்வு செய்து நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​ என சமூக ஆர்​வலர்​கள்​ வலியுறுத்​தியுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x