Published : 17 Sep 2025 06:14 AM
Last Updated : 17 Sep 2025 06:14 AM

கடத்தல் கும்பல்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் தீயி​ட்டு அழிப்பு

கடத்தல் கும்பல்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு ஐஜி செந்தில் குமாரி தீயிலிட்டு அழித்தார்.

சென்னை: கடத்தல் கும்​பல்​களிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட, ரூ.5 கோடி மதிப்​புள்ள போதைப் பொருட்​கள் தீயி​லிட்டு அழிக்கப்பட்​டது. தமிழகம் முழு​வதும் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனையை தடுக்​கும் வகை​யில், அமலாக்கப் பணி​யகம் சிஐடி என்​னும் போதைப் பொருள் நுண்​ணறிவு பிரிவு போலீ​ஸார் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இப்​பிரிவு போலீ​ஸா​ரால் 428 வழக்​கு​களில் கைப்​பற்​றப்​பட்ட 4,727 கிலோ கஞ்​சா, 0.72 கி.கி​ராம் ஹெரா​யின் உள்பட மொத்​தம் ரூ.5 கோடி மதிப்​பிலான போதைப் பொருளை, அப்​பிரிவு ஐ.ஜி செந்​தில் குமாரி தலை​மையி​லான போலீ​ஸார் செங்​கல்​பட்​டில் உள்ள தென்​மேல்​பாக்​கம் பகு​தி​யில் தீயி​லிட்டு நேற்று அழித்​தனர்.

இந்​தாண்​டில் மட்​டும் இது​வரை 1,742 வழக்​கு​களில் பறி​முதல் செய்​யப்​பட்ட மொத்​தம்​,26,329 கிலோ கஞ்​சா, 1.862 கிலோ ஹெரா​யின், 245 கிலோ கஞ்சா சாக்​லெட், 1.61 கிலோ மெத்​தம்​பெட்​டமைன் உள்​ளிட்ட ரூ.27 கோடி மதிப்​பிலான போதைப் பொருளை, போதைப் பொருள் நுண்​ணறிவு பிரிவு போலீ​ஸார் ஏற்​க​னவே அழித்​தனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மேலும், போதைப் பொருள் நடமாட்​டம் தொடர்​பாக தகவல் கிடைத்​தால் பொது மக்​கள் 10581 என்ற இலவச உதவி எண்​ணிலும், 94984 10581 என்ற வாட்​ஸ்​அப் மூல​மாக​வும் அல்​லது spnibcid@gmail.com என்ற மின்​னஞ்​சல் மூல​மாக​வும் தெரிவிக்​கலாம் என போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x