Published : 15 Sep 2025 06:35 AM
Last Updated : 15 Sep 2025 06:35 AM

சென்னை | சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தட்டிக் கேட்ட ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டியவர் கைது

சென்னை: சென்னை வானகரம் ராஜீவ் நகரைச் சேர்ந்​தவர் ஏழு​மலை(52). ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​கிறார். மேலும், அப்​பகு​தி​யின் குடி​யிருப்​போர் பொது நலச் சங்​கத்​தின் பிர​தி​நி​தி​யாக​வும் உள்​ளார். ராஜீவ் நகரில் டிரான்​ஸ்​போர்ட் நிறு​வனம் நடத்தி வரும் விக்​னேஷ்(28) என்​பவரும் வசித்து வரு​கிறார்.

இவர் தனது நிறு​வனத்​துக்​கு சொந்​த​மான 10-க்​கும் மேற்​பட்ட வாக​னங்​களை ராஜீவ் நகர் பகு​தி​யில் சாலை​யோரத்​தில் நிறுத்தி வைத்​துள்​ளார். இதனால் அப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​வ​தாக, அப்​பகுதி மக்​கள் ஏழு​மலை​யிடம் தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து விக்​னேஷிடம் ஏழு​மலை கேட்​டுள்​ளார்.

அப்​போது விக்​னேஷ், தகாத வார்த்​தைகளால் ஏழு​மலையை திட்​டியது மட்​டுமில்​லாமல், அவரை உருட்​டுக் கட்​டை​யால் தாக்​கி, பீர் பாட்​டிலை உடைத்து கொலை மிரட்​டல் விடுத்​த​தாக கூறப்​படு​கிறது. இதுகுறித்து ஏழு​மலை அளித்த புகாரின் பேரில் வானகரம் போலீ​ஸார் விக்​னேஷை பிடித்து விசா​ரணை நடத்​தினர்.

விசா​ரணை​யில் ராஜீவ் நகரில் வெங்​கடேஷ் என்​பவருக்​கு சொந்​த​மான காலி நிலத்தை விக்​னேஷ் ஆக்​கிரமித்​துள்​ள​தாக​வும், இதுகுறித்து வெங்​கடேஷ் கேட்​ட​போது அவருக்​கும் கொலை மிரட்​டல் விடுத்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து வழக்​குப்​ப​திவு செய்து விக்​னேஷை கைது செய்த போலீ​ஸார்​ அவரை சிறை​யில்​ அடைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x