Published : 12 Sep 2025 06:34 AM
Last Updated : 12 Sep 2025 06:34 AM

திருமணத்துக்கு நகை வாங்குவது போல் நடித்து 20 நகைக் கடைகளில் மோதிரம் திருட்டு: 2 பேர் கைது

முஷீர் அகமது, இம்​தி​யாஸ்​கான்

சென்னை: ​திரு​மணத்​துக்கு நகை வாங்​கு​வது​போல் நடித்து சென்​னை​யில் 20 நகைக் ​கடைகளில் மோதிரம் திருட்​டில் ஈடு​பட்ட கொள்​ளை​யர்​கள் இரு​வரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

நுங்​கம்​பாக்​கம், வள்​ளுவர் கோட்​டம் நெடுஞ்​சாலை​யில் உள்ள பிரபல​மான நகைக்​கடைக்கு கடந்த 2-ம் தேதி மதி​யம், 2வாடிக்​கை​யாளர்​கள் வந்​தனர். அவர்​கள் மோதிரம் பிரிவுக்​குச் சென்று பல்​வேறு மோதிரங்​களைப் பார்த்​து​விட்டு எது​வும் பிடிக்​க​வில்லை என்று கூறி வெளியேசென்று விட்​டனர்.

பின்​னர், கடை ஊழியர்​கள் மோதிரங்​களைச் சரி​பார்த்​த​போது, அதில் சுமார் 4 கிராம் எடை கொண்ட ஒரு தங்க மோதிரம் திருடு போனது தெரிய​வந்​தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்​கள், இதுதொடர்​பாக கடை உரிமை​யாள​ருக்​குத் தகவல் தெரி​வித்​தனர். அதைத்​தொடர்ந்​து, நுங்​கம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது.

போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல்​கட்​ட​மாக நகைக்​கடை​யில் உள்ள சிசிடிவி பதிவு​களை ஆய்வு செய்​தனர். இதில், மோதிரம் வாங்​கு​வது​போல் நடித்​து, திருட்​டில் ஈடு​பட்​டது சென்னை செம்​பி​யத்​தில் வசிக்​கும் திருப்​பத்​தூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த இம்​தி​யாஸ்​கான்​(47), திரு​வல்​லிக்​கேணி பெரிய தெரு​வைச் சேர்ந்த முஷீர் அகமது (43) என்​பது தெரிய​வந்​தது.

தலைமறை​வாக இருந்த இரு​வரை​யும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். முன்​ன​தாக அவர்​களிட​மிருந்து 54 கிராம் எடை கொண்ட 18 தங்க மோதிரங்​கள் மற்​றும் இருசக்கர வாக​னம் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

போலீஸ் விசா​ரணை​யில், இரு​வரும் சேர்ந்து நுங்​கம்​பாக்​கம், தண்​டை​யார்​ பேட்​டை, ராயபுரம், திருவொற்​றியூர், அம்​பத்​தூர், கொளத்​தூர் உள்​ளிட்ட சென்​னை​யில் பல்​வேறு பகு​தி​களில் உள்ள20 நகைக் கடைகளில், திரு​மணத்​துக்கு மோதிரம் வாங்​கு​வது போல நடித்​து, கடைக்​காரரின் கவனத்தை திசை திருப்​பி, மோதிரத்​தை திருடிச்​ சென்​றது தெரிய​வந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x