Published : 12 Sep 2025 06:46 AM
Last Updated : 12 Sep 2025 06:46 AM

திருப்பூர் | புகார் அளித்தவரை காரை ஏற்றி கொன்ற திமுக பேரூராட்சி தலைவர் கைது

பழனிசாமி

திருப்பூர்: மக்​களுக்கு பயன்​பாடற்ற இடத்​தில் சாலை அமைத்​ததை எதிர்த்து புகார் அளித்​தவரை காரை ஏற்​றிக் கொன்ற வழக்கில், திமுக பேரூ​ராட்​சித் தலை​வர் கைது செய்​யப்​பட்​டார். திருப்​பூர் மாவட்டம் சாமளாபுரம் அடுத்த கரு​கம்​பாளை​யத்தை சேர்ந்​தவர் பழனி​சாமி (57). இவர் அப்​பகு​தி​யில் உள்ள தேநீர் கடைக்கு நேற்று முன்​தினம் மாலை சென்று விட்​டு, இருசக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார்.

சாமளாபுரம் - காரணம்​பேட்டை சாலை​யில் கரு​கம்​பாளை​யம் அரசு தொடக்​கப்​பள்ளி அருகே சென்​ற​போது, பின்​னால் வந்த கார் இருசக்கர வாக​னத்​தின் மீது மோதி​யது. இதில் பழனி​சாமி உயி​ரிழந்​தார். விபத்தை ஏற்​படுத்​திய கார், நிற்​காமல் சென்​று​விட்​டது.

தகவலறிந்து வந்த மங்​கலம் போலீ​ஸார் பழனி​சாமி உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். விசா​ரணை​யில், விபத்தை ஏற்​படுத்​தி​விட்டு தப்​பிச் சென்​றது சாமளாபுரம் பேரூ​ராட்​சித் தலை​வ​ரான பழனி​சாமி (60) என்​பதும், அவர் குடி​போதை​யில் விபத்தை ஏற்​படுத்​தி​யதும் போலீ​ஸாரின் முதல்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்​து, பழனி​சாமியை பிடித்து போலீ​ஸார் விசா​ரணை நடத்தினர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு: இந்​நிலை​யில், பழனி​சாமி​யின் மரணத்​தில் சந்​தேகம் இருப்​ப​தாக அப்​பகு​தி​யினர் குற்​றம் சாட்​டினர். தொடர் விசா​ரணை​யில், முன்​விரோதம் காரண​மாக இருசக்கர வாக​னத்​தின் மீது காரை ஏற்​றி, பேரூ​ராட்​சித் தலை​வர் பழனி​சாமி கொலை செய்​தது கண்​டறியப்​பட்​டது. அவரைக் கைது செய்​து, போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “விபத்​தில் இறந்த பழனி​சாமி, பேரூ​ராட்சி நிர்​வாகம் மக்​களுக்கு பயன்​பாடில்​லாத தனி​யார் இடத்​தில் சாலை போட்​டது தொடர்​பாக, திருப்​பூர் ஆட்சி​யரிடம் புகார் அளித்​திருந்​தார்.

சுயேச்சையாக போட்டியிட்டு... இதனால் அந்​தப் பணி நிறுத்​தப்​பட்​டது. இதனால் ஆத்​திர மடைந்​து, புகார் அளித்த பழனி​சாமியைக் கொலை செய்​துள்​ளார் பேரூ​ராட்​சித் தலை​வர் பழனி​சாமி. இவர் ஆரம்​பத்​தில் மார்க்​சிஸ்ட் கட்​சி​யில் இருந்​தா​லும், கடந்த முறை மார்க்​சிஸ்ட் கட்சி சார்​பில் போட்​டி​யிட வாய்ப்பு கிடைக்​காத​தால் சுயேச்​சை​யாக போட்​டி​யிட்டு வென்​றுள்​ளார். பின்​னர், திமுக​வில் இணைந்து பேரூ​ராட்​சித் தலை​வர் பதவியை கைப்​பற்​றிய​வர்” என்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x