Published : 11 Sep 2025 06:56 AM
Last Updated : 11 Sep 2025 06:56 AM

நீலகிரி | மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: போக்சோவில் தந்தை கைது

கோத்தகிரி: நீல​கிரி மாவட்​டத்​தில் மது​போதை​யில் மகளுக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்த தந்​தை, போக்சோ சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டார். நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி பகு​தியைச் சேர்ந்த 40 வயது மதிக்​கத்​தக்க ஒரு​வர், அதே பகு​தி​யில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் மேலா​ள​ராக பணி​யாற்றி வரு​கிறார்.

இவருக்கு மனைவி மற்​றும் 18 வயது, 15 வயது என 2 பெண் குழந்​தைகள் உள்​ளனர். முதல் மகள் கல்​லூரி​யில் முதலாம்​ஆண்டு படித்து வரு​கிறார். 15 வயது சிறுமி​யான மற்​றொரு மகள் அதே பகு​தி​யில் உள்ள ஒரு பள்​ளி​யில் படித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், சில நாட்​களுக்கு முன்பு மது போதை​யில் வீட்​டுக்கு வந்த தந்​தை, 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்​தார். கடந்த சில நாட்​களுக்கு முன் சிறுமிக்கு உடல்​நிலை பாதிப்பு ஏற்​பட்​டது. கோத்​தகிரி அரசு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்று பரிசோதனை செய்​த​தில், அந்த சிறுமி கர்ப்​ப​மாக இருப்​பது தெரிய​வந்​தது.

இதைத் தொடர்ந்து அந்த சிறுமி சிகிச்​சைக்​காக ஊட்டி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இதுகுறித்து குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​து சிறுமி​யின்​ தந்​தையை கைது செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x