Published : 10 Sep 2025 06:19 AM
Last Updated : 10 Sep 2025 06:19 AM

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

பாதிரியார் ஆண்ட்ரூஸ்

திருப்பூர்: ​காப்​பகத்​தில் தங்​கிப் படித்து வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்​தரவு கொடுத்​த​தாக கைதான பாதிரி​யாருக்கு 7 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. திருப்​பூர் மாவட்​டம் ஊத்​துக்​குளி பல்​ல​க​வுண்​டம்​பாளை​யம் கூனம்​பட்​டியை சேர்ந்​தவர் ஆண்ட்​ரூஸ் (50). பாதிரி​யரான இவர், அப்​பகு​தி​யில் ஆதர​வற்ற பள்ளி மாணவர்​களுக்​கான காப்​பகம் நடத்தி வந்​தார். இதில் 20 குழந்​தைகள் தங்​கிப் படித்துவந்​தனர்.

கடந்த 2022 டிசம்​பர் மாதம் காப்​பகத்​தில் தங்கி படித்த 14 வயது சிறுமிக்​கு, பாதிரி​யார் ஆண்ட்​ரூஸ் பாலியல் தொந்​தரவு கொடுத்​துள்​ளார். உடல் நலக்​குறைவு ஏற்​பட்​ட​தால் அந்த சிறுமி வீட்​டுக்​குச் சென்​று, தனது தாயாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரி​வித்​தார். இதில் அதிர்ச்சி அடைந்த தாயார் ஊத்​துக்​குளி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

போலீஸார் விசா​ரணை நடத்தி ஆண்ட்​ரூஸை கைது செய்​தனர். இந்த வழக்கு விசாரணை திருப்​பூர் மாவட்ட மகளிர் நீதிமன்​றத்​தில் நடந்​தது. வழக்கை விசா​ரித்த நீதிபதி கோகிலா, குற்​றம் சுமத்​தப்​பட்ட பாதிரி​யார் ஆண்ட்​ரூஸுக்கு 7 ஆண்​டு​ கடுங்​காவல் சிறை தண்​டனை மற்​றும்​ ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று உத்​தர​விட்டார். இதையடுத்​து, ஆண்ட்​ரூஸ் கோவை சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x