Published : 10 Sep 2025 06:14 AM
Last Updated : 10 Sep 2025 06:14 AM

விருத்தாசலம் நகரில் போதையில் காவலர்கள் உட்பட 6 பேரை தாக்கிய ரவுடிகள்: 2 பேரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

மது போதையில் வந்த ரவுடிகளின் தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் விசாரணை நடத்திய கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார்.

விருத்தாசலம்: கடலூர் மாவட்​டம் விருத்​தாசலம் நகரில் போதை​யில் காவலர்​கள் உட்பட 6 பேரைத் தாக்​கிய ரவுடிகள் இரு​வரை போலீ​ஸார் துப்​பாக்​கி​யால் சுட்​டுப் பிடித்​தனர். மேலும், தப்​பியோடிய ஒரு​வரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

விருத்​தாசலம் பழமலை​நாதர் நகரில் நேற்று அதி​காலை 3 இளைஞர்​கள் கட்​டு​மானப் பணி நடந்து வரும் வீட்​டில் உறங்​கிக் கொண்​டிருந்த கட்டிடத் தொழிலாளி கார்த்​திக் (23) என்​பவரை சரமாரி​யாகத் தாக்​கினர். அங்​கிருந்து தப்​பியோடிய கார்த்​திக், அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் தஞ்​சமடைந்​தார்.

பின்​னர் அங்​கிருந்து வெளி​யேறிய 3 இளைஞர்​களும், கள்​ளக்​குறிச்சி செல்​லும் அரசுப் பேருந்​தில் ஏறி மது பாட்​டிலைக் காண்​பித்து ரகளை​யில் ஈடு​பட்​டனர். மேலும், பேருந்து ஓட்​டுநர் கணேசனை சரா​மாரி​யாக தாக்​கினர்.

இதனால் பயணி​கள் கூச்​சலிடவே மூவரும் அங்​கிருந்து தப்​பிச் சென்​று, அரசு மருத்​து​வ​மனை வளாகம் முன்​புள்ள பெட்​டிக்​கடைகளை உடைத்​தனர். மேலும், கடை உரிமை​யாளர் ராஜேந்​திரன், சுந்​தரமூர்த்தி ஆகியோரை பாட்​டிலால் தாக்​கினர். இவர்​கள் தாக்​கிய​தில் காயமடைந்த கார்த்​திக், கணேசன், ராஜேந்​திரன், சுந்​தரமூர்த்தி ஆகியோர் விருத்​தாசலம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இந்த சம்​பவங்​களின்​போது 3 பேரில் இரு​வர் பொது​மக்​களைத்தாக்க, மற்​றொரு​வர் செல்​போனில் வீடியோ​வாக பதிவு செய்து வந்​துள்​ளார். இது தொடர்​பாக போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், பொது​மக்​களைத் தாக்​கிய​வர்​கள் பழமலை​நாதர் நகரைச் சேர்ந்த கந்​தவேல், சிவா, பாலாஜி என்​பதும், மது​போதை​யில் ரகளை​யில் ஈடு​பட்​டதும் தெரிய​வந்​தது. அவர்​களை போலீ​ஸார் தேடினர்.

விருத்​தாசலத்தை அடுத்த கோபு​ராபுரம் விளை நிலப் பகு​தி​யில் அவர்​கள் பதுங்​கி​யிருப்​பதை அறிந்த மங்​கலம்​பேட்டை காவல் ஆய்​வாளர் பார்த்​த​சா​ர​தி, உதவி ஆய்​வாளர் சந்​துரு, காவலர்​கள், வீரமணி, வேல்​முரு​கன் ஆகியோர் அங்கு சென்​றனர். அப்​போது 3 பேரில் ஒரு​வ​ரான கந்​தவேல், காவலர்​கள் வீரமணி, வேல் ​முரு​கனை அரி​வாளல் வெட்​டி​னார்.

உடனே உதவி ஆய்​வாளர் சந்​துரு கந்​தவேலின் காலில் துப்​பாக்​கி​யால் சுட்​டு, அவரைப் பிடித்​தார். தப்​பியோடிய சிவா கீழே விழுந்​த​தில் கால், கை எலும்பு முறிந்​தது. பாலாஜி தப்​பியோடி விட்​டார். கடலூர் எஸ்​.பி. ஜெயக்​கு​மார் செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “தாக்​குதலில் ஈடு​பட்ட கந்​தவேல், சிவா, பாலாஜி ஆகியோர் காஸ் கிடங்​கில் பணிபுரிந்து வரு​கின்​றனர். இவர்​கள் மீது அடிதடி உள்​ளிட்ட வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. பொது​மக்​களைத் தாக்​கியதை வீடியோ எடுத்து இன்​ஸ்​டாகி​ராமில் பதிவிட்​டுள்​ளனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x