Published : 09 Sep 2025 07:00 AM
Last Updated : 09 Sep 2025 07:00 AM

விருத்தாசலம் சுற்றுவட்டாரங்களில் ரூ.6 கோடி மோசடி செய்த பாமக நிர்வாகி கைது

சலீம்

விருத்தாசலம்: ​​விருத்​தாசலம்​ சுற்​று​வட்​டாரங்​களில்​ பல்​வேறு நபர்​களிடம்​ ரூ.6 கோடி வரை மோசடி​யில்​ ஈடு​பட்​ட பாமக இளைஞரணி நிர்​வாகி கைது செய்​யப்​பட்​டார்​. கடலூர்​ மாவட்​டம்​ கரு​வேப்​பிலங்​குறிச்​சி​யைச்​ சேர்ந்​த கிருபை என்​பவர்​ விருத்​தா​சலம்​ காவல்​ நிலை​யத்​தில்​ புகார்​ ஒன்​றை அளித்​தார்​.

அதில், “பெண்​ணாடத்​தைச்​ சேர்ந்​த ஷேக்​தாவூத்​ மகன்​ சலீம்​ (28) என்​பவர், வங்​கி​யில்​ ஏலம்​ விடப்​படும்​ நகைகளை குறைந்​த விலைக்​கு வாங்​கித்​ தரு​வ​தாகக்​ கூறி, ரூ.10 லட்​சத்​தை என்​னிடம்​ வாங்​கினார். ஆனால்​ நகை​யை வாங்​கித்​ தராமல்​ ஏமாற்​றுகிறார்​. பணத்​தைத்​ திரும்​பக்​ கேட்​டால்​ கொலை மிரட்​டல்​ விடுக்​கிறார்​” எனக்​ குறிப்​பிட்​டிருந்​தார்​.

இதே​போன்​று பெண்​ணாடத்​தைச்​ சேர்ந்​த மெய்​கண்​ட​நாதன்​ என்​பவர்​, மருத்​து​வப்​ படிப்​பு பயில வங்​கிக்​கடன்​ பெற முயற்​சித்​த​போது, விரை​வாக கடன்​ வாங்​கித்​ தரு​வ​தாகக்​ கூறி, அவரிடம்​ ரூ.6 லட்​சம்​ வரை சலீம்​ மோசடி செய்​துள்​ள​தாக​வும்​ குற்​றச்​சாட்​டு எழுந்​துள்​ளது. இது​போன்​று 17 பேரிடம்​ ரூ.1.75 கோடி வரை​​ சலீம்​ முறை​கேடு செய்​திருப்​ப​தாக விருத்​தாசலம்​ காவல்​நிலை​யத்​தில்​ புகார்​கள்​ பதி​வாகி​யுள்​ளன.

இதுத​விர, சலீம்​ மீது குற்​றச்​சாட்​டு​கள்​ கூறி பல்​வேறு மனுக்​கள்​ பெண்​ணாடம்​, திட்​டக்​குடி, கரு​வேப்​பிலங்​குறிச்​சி காவல்​ நிலை​யங்​களுக்​கு வந்​துள்​ளன. அந்​த வகை​யில்​ மொத்​தத்​தில்​ ரூ.6 கோடி வரை மோசடி செய்​திருப்​ப​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில்​, சலீம்​ மீது விருத்​தாசலம்​ காவல்​ நிலை​ய உதவி ஆய்​வாளர்​ ஐயனார்​ வழக்​குப்​ப​திவு செய்​தார்​. அதைத்​தொடர்ந்​து, திருப்​பூரில்​ தலைமறை​வாக இருந்​த சலீமை போலீ​ஸார்​ நேற்​று கைது செய்​தனர்​. கைது செய்​யப்​பட்​டுள்​ள சலீம்​, கடலூர்​ மேற்​கு ​மாவட்​ட​பாமக இளைஞரணி நிர்​​வாகி​யாக (அன்​புமணி அணி) உள்​ளார்​ என்​பது குறிப்​பிடத்​தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x