Last Updated : 09 Sep, 2025 05:30 AM

1  

Published : 09 Sep 2025 05:30 AM
Last Updated : 09 Sep 2025 05:30 AM

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புதிய மோசடி: பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை

சென்னை: இணை​யத்​தில் ஏ.ஐ. (செயற்கை நுண்​ணறி​வு) தொழில்​நுட்​பம் வழி​யாக​வும் மோசடி அரங்​கேற்​றப்​பட்டு வரு​கிறது. எனவே பொது​மக்​கள் உஷா​ராக இருக்க வேண்​டும் என சைபர் க்ரைம் போலீ​ஸார் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

ஆன்​லைன் வர்த்​தகம், இரட்​டிப்பு பணம், டிஜிட்​டல் கைது, பகு​தி நேர வேலை, கிரிப்டோ கரன்​சி, பங்​குச்​சந்தை முதலீடு, வாட்​ஸ்​-அப் ஹேக்​கிங் உட்பட பல்​வேறு வகை​யான சைபர் க்ரைம் மோசடிகள் தினம்​தோறும் அரங்​கேறி வரு​கின்​றன. மேலும், வங்​கியி​லிருந்து பேசுவ​தாக​வும், போலீஸ் அதி​காரி பேசுவ​தாக​வும் செல்​போனில் அழைத்​தோ, மிரட்​டியோ பணம் பறிப்பு நிகழ்​வு​களும் நடை​பெறுகின்​றன.

மோசடிகளில் ஈடு​படும் நபர் அவரது முகத்​தையோ, அடை​யாளத்​தையோ காண்​பிப்​பது இல்​லை. அவரது நம்​பிக்​கையூட்​டும் வார்த்​தைகளே அவரது முதலீடு. இதை நம்​பியே பலர் கோடிக்​கணக்​கில் பணத்தை இழந்​துள்​ளனர். இக்​கும்​பல் தற்​போது புது​வகையான மோசடிகளைக் கையிலெடுத்து வரு​கிறது. அந்த வகை​யில் ஏ.ஐ. தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்​தத் தொடங்கியுள்ளது.

நிறு​வனங்​கள், கல்​வி, நிதி, போக்​கு​வரத்​து, விவ​சா​யம், விற்​பனை, சந்​தைப்​படுத்​துதல், சைபர் பாது​காப்​பு, சட்​டம் உள்பட அனைத்து துறை​களி​லும் தற்​போது ஏ.ஐ. தொழில் நுட்ப பயன்​பாடு உள்​ளது. மேலும், நோயைக் கண்​டறிதல், மருந்​துகளை உரு​வாக்​குதல், தனி​நபருக்​கான சிகிச்சை முறை​களை வடிவ​மைத்​தல் போன்ற துறை​களி​லும், மோசடி கண்​டறிதல், முதலீட்டு ஆலோ​சனை, கடன் தகுதி ஆய்​வு, வாடிக்​கை​யாளர் சேவை, விளம்​பரம் போன்ற துறை​களி​லும் ஏ.ஐ. பயன்​படுத்​தப்​படு​கிறது.

இப்​படி அனைத்து துறை​களி​லும் ஏ.ஐ. தொழில்​நுட்​பம் பயன்​பாட்​டில் உள்​ள​தால் மோசடி கும்​பலும் அதே தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்​தத் தொடங்​கி​யுள்​ளது. இதுதொடர்​பாக சைபர் க்ரைம் போலீ​ஸார் கூறியதாவது: ஏ.ஐ. தொழில்​நுட்​பம் அனைத்து தரப்​பினருக்​கும் உதவி​யாக உள்​ளது. இது​போன்ற தொழில்​நுட்​பத்தை பெற கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது.

இணை​யதளங்​களில் இலவச​மாக​வும் கிடைக்​கிறது. இதை பயன்​படுத்த தொங்கியுள்ள சைபர் க்ரைம் மோசடி கும்​பல் இணையதள தேடு​தலில் அவர்​கள் தொடர்​புடைய போலி ஏ.ஐ. தேடு​தலை முதலில் வரும்​படி வைத்து விடு​கின்​றனர். அதை அழுத்தி அடுத்​தகட்ட நகர்​வுக்கு பொது​மக்​கள் செல்​லும்​போது, அவர்​கள் நம்​முடைய அனைத்து தகவல்​களை​யும் திருடும் வகையில் செட்​-அப்பை மாற்றி விடு​கின்​றனர். மேலும், அவர்​களை நோக்கி நம்மை செல்ல வைத்து விடு​கின்​றனர்.

இதன்​மூலம் நமது அனைத்து தகவல்​களும் திருடப்​படு​வதோடு, பணம் மோசடிக்​கும் வழி​வகுத்து விடு​கின்​றனர். எனவே, இணையத்​தில் ஏ.ஐ. தொடர்​பான தேடு​தலில் கவன​மாக இருக்க வேண்​டும். ஒரு​வேளை யாரேனும் பாதிக்​கப்​பட்​டால் ‘1930’ எண்ணைத் தொடர்பு கொள்​ளலாம் அல்​லது www.cybercrime.gov.in என்ற மின்​னஞ்​சல்​ மூலம்​ தொடர்​பு கொள்​ளலாம் என்​றனர்​. இவ்வாறு கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x