Published : 07 Sep 2025 12:26 AM
Last Updated : 07 Sep 2025 12:26 AM

ரூ.7.50 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்

சிதம்பரம் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை பார்வையிட்ட எஸ்.பி. ஜெயக்குமார்.

கடலூர்: சிதம்​பரத்​தில் ரூ.7.50 கோடி மதிப்​பிலான அம்​பர்​கிரீஸ் என்ற திமிங்கலஎச்​சத்தை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.

சிதம்​பரம் போலீ​ஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்​படை​யில், கடலூர் எஸ்​.பி. ஜெயக்​கு​மார் உத்​தர​வின்​பேரில் காவல் ஆய்​வாளர் அம்​பேத்​கர் மற்​றும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு சிதம்​பரம் தச்​சன்​குளம் அருகே வாகன சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது அவ்​வழியே வந்த ஒரு காரை நிறுத்திசோதனை​யிட்​ட​தில், 7 கிலோ 600கிராம் எடை​யுள்ள திமிங்கல எச்​சம் பதுக்​கி வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, திமிங்கல எச்​சத்​தை​யும், காரை​யும் பறி​முதல் செய்த போலீ​ஸார், காரில் இருந்தமயி​லாடு​துறை மாவட்​டம் திரு​விழுந்​தூரைச் சேர்ந்த ராஜசேகர் (28) என்​பவரை கைது செய்த​னர்.மேலும், இதில் தொடர்​புடைய வேதா​ரண்​யம் ராஜா என்​பவரை தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x