Published : 06 Sep 2025 05:51 AM
Last Updated : 06 Sep 2025 05:51 AM

தி.நகரில் தூய்மை பணியாளர்களின் மீது உருட்டுக்கட்டையால் தாக்குதல்: ஜவுளிக்கடை ஊழியர்கள் 6 பேர் கைது

சென்னை: தி.நகரில் தூய்மை பணியாளர்​களை உருட்​டுக்​கட்​டை​யால் தாக்​கிய​தாக ஜவுளிக்​கடை ஊழியர்​கள் 6 பேர் கைது செய்யப்​பட்​டுள்​ளனர். தி.நகர், ர​க​நாதன் தெரு​வில் பிரபல​மான ஜவுளிக்​கடை ஒன்று உள்​ளது.

இந்த கடை​யின் அருகே நேற்று முன்​தினம் நள்​ளிரவு துப்​புறவு பணி​யாளர்​கள் தூய்​மைப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, ஒப்​பந்த தூய்​மைப் பணி​யாளர்​களில் ஒரு​வ​ரான மயி​லாப்​பூரைச் சேர்ந்த அர்​ஜுன் (49) என்​பவர், தான் குப்​பை​யாக சேகரித்த அட்​டைகளை சம்​பந்​தப்​பட்ட ஜவுளிக்​கடை ஷட்​டர் அருகே வைத்​துள்​ளார்.

இதை கவனித்த ஜவுளிக்​கடை ஊழியர்​கள் இதற்கு எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதில் இரு தரப்​பினருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதைப் பார்த்த துப்​புறவு கண்​காணிப்​பாளர் (சூப்​பர்​வைசர்) லட்​சுமணன் (31) தனது ஊழிய​ரான அர்​ஜுனுக்கு ஆதர​வாகப் பேசி​னார். இதனால், ஆத்​திரமடைந்த ஜவுளிக்​கடை ஊழியர்​கள் 6 பேர் அருகே கிடந்த உருட்​டுக் கட்​டைகளால் இரு​வரை​யும் சரமாரி​யாக தாக்​கினர்.

இதில், காயம் அடைந்த இரு​வரும் கே.கே.நகரில் உள்ள ஈஎஸ்ஐ மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். அங்கு இரு​வரின் தலை​யிலும் தையல் போடப்​பட்​டுள்​ளது. இந்த விவ​காரம் தொடர்​பாக மாம்​பலம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து தாக்​குதலில் ஈடு​பட்ட ஜவுளிக்​கடை ஊழியர்​கள் 6 பேரை​யும் கைது செய்து விசா​ரித்து வரு​கின்றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x