Published : 03 Sep 2025 05:50 AM
Last Updated : 03 Sep 2025 05:50 AM

சென்னை விமான நிலையத்தில் ரூ.56 கோடி கொகைன் பறிமுதல் - எத்தியோப்பிய நாட்டிலிருந்து கடத்திய மூவர் கைது

கொகைன் போதைப் பொருள் அடைத்து எடுத்து வரப்பட்ட சாக்லெட் பெட்டிகள். (உள்படம்) சாக்லெட் வடிவில் இருந்த கொகைன் போதைப் பொருள்.

சென்னை: வெளி​நாடு​களி​லிருந்து சென்​னைக்கு பெரிய அளவில் போதைப்​பொருள் கடத்தி வரப்​படு​வ​தாக வந்த தகவலை அடுத்து, சென்னை விமான நிலை​யத்​தில் சுங்​கத் துறை, போதைப்​பொருள் கட்​டுப்​பாட்டு பணியக அதி​காரி​கள் தீவிர கண்காணிப்​பில் ஈடு​பட்​டு வருகின்றனர்.

எத்​தி​யோப்​பிய தலைநகர் அடீஸ் அபாபா நகரில் இருந்து எத்​தி​யோப்​பியன் ஏர்​லைன்ஸ் விமானம் சென்​னைக்கு நேற்று முன்தினம் அதி​காலை வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் அதி​காரி​கள் தீவிரமாக சோதனை செய்து அனுப்​பிக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது வந்த 2 வட இந்​தி​யர்​கள் மீது அதி​காரி​களுக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. சுற்​றுலா விசா​வில் எத்​தி​யோப்​பியா சென்​று​விட்டு வந்த அவர்​கள் வைத்​திருந்த வெளி​நாட்டு சாக்​லெட்​கள் அடங்​கிய பெட்டி​களை பிரித்து சோதனை செய்​தனர். அதில் உயர்ரக கொகைன் போதைப்​பொருள் இருப்​பது தெரிய​வந்​தது.

எனவே இரு​வரை​யும் கைது செய்த அதி​காரி​கள், சர்​வ​தேச மதிப்​பில் ரூ.56 கோடி மதிப்​புள்ள 5.618 கிலோ கொ​கைன் போதைப்​பொருளை பறி​முதல் செய்​தனர். இரு​வரிட​மும் அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தி​ய​தில், பணத்​துக்​காக போதைப்​பொருளை கடத்தி வந்​த​தாக​வும், இதனை வாங்​கு​வதற்​காக இரு​வர் விமான நிலை​யம் வந்​திருப்​ப​தாக​வும் தெரி​வித்​தனர். இதையடுத்​து, இரு​வரை​யும் பிடிக்க கண்​காணிப்பு கேம​ராக்​களை அதி​காரி​கள் ஆய்வு செய்​த​போது, ஓர் இளைஞர் உள்​நாட்டு முனை​யம் வழி​யாக விமானத்​தில் டெல்லி தப்​பிச்சென்​றார்.

விமான நிலையத்தில் இருந்த மற்​றொரு​வரை அதி​காரி​கள் கைது செய்​தனர். விசா​ரணை​யில், அவர் மும்​பையைச் சேர்ந்​தவர் என்​பதும், தப்​பிச் சென்​றவர் நைஜீரியா நாட்​டைச் சேர்ந்​தவர் என்​பதும், அவர் சர்வதேச போதைப்​பொருள் கும்​பலுடன் தொடர்​பில் இருப்​பதும் தெரிந்​தது.

இதையடுத்​து, விமானத்​தில் டெல்லி தப்​பிச் சென்ற நைஜீரிய இளைஞரை அதி​காரி​கள் டெல்லி சென்று கைது செய்​தனர். கடந்த மாதம் 23-ம் தேதி சென்னை விமான நிலை​யத்​தில் நைஜீரிய பெண் பயணி​யிட​மிருந்து ரூ.20 கோடி மதிப்​புள்ள கொ​கைன் பறி​முதல் செய்​யப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

ரூ.12 கோடி கடத்தல் சிகரெட் அழிப்பு: சென்னை விமான நிலை​யத்​துக்கு வெளி​நாடு​களி​லிருந்து கடத்தி வரப்​படும் இ-சிகரெட்​கள், சாதாரண சிகரெட், புகை​யிலைப் பொருட்​களின் பாக்​கெட்​டு​களில் 85 சதவீதம் அளவுக்​கு, ‘பு​கைபிடிப்​பது உடல் நலத்​துக்கு கேடு விளைவிக்​கும்’ என்ற எச்​சரிக்கை விளம்​பரங்​கள் இடம்​பெற வேண்​டும். அவ்​வாறு இல்​லாத சிகரெட் பாக்​கெட்​டு​கள், ‘மது குடிப்​பது உடல் நலத்​துக்கு கேடு’ என்ற எச்​சரிக்கை விளம்​பரம் இல்​லாத மது பாட்​டில்​கள் போன்​றவற்றை சென்னை சுங்க அதி​காரி​கள், பயணி​களிடம் இருந்து பறி​முதல் செய்​கின்​றனர்.

மேலும் பொருட்​கள் உற்​பத்​தி, தயாரிப்பு தேதி, இறக்​கும​தி, ஏற்​றும​தி, எப்​படி சென்​னைக்கு கொண்டு வரப்​பட்​டது போன்ற விவரங்​கள் இல்​லாத பொருட்​கள், பார்​சல்​கள் பறி​முதல் செய்​யப்​படு​கின்​றன. இவ்​வாறு பறி​முதல் செய்​யப்​பட்ட ரூ.12.5 கோடி மதிப்​பிலான கடத்​தல் பொருட்​கள் திரு​வள்​ளூர் மாவட்​டம் கும்​மிடிப்​பூண்​டி​யில் உள்ள ஆலைக்கு எடுத்​துச் செல்​லப்​பட்​டு, தீயில்​ எரித்​து அழிக்​கப்​பட்​டன என்​று சுங்​க அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x