Published : 02 Sep 2025 07:42 AM
Last Updated : 02 Sep 2025 07:42 AM

'மொபைல் ஆப்'பில் தவணை முறையில் முதலீடு: நாள்தோறும் பணம் தருவதாக 530 பேரிடம் பல கோடி மோசடி

புதுச்சேரி: ‘மொபைல் ஆப்​’பில் தவணை முறை​யில் முதலீடு செய்​தால், நாள்​தோறும் ரொக்​கப் பணம் தரப்​படும் என 530 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி நடந்​துள்​ள​தாக புதுச்​சேரி சைபர் க்ரைம் போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

புதுச்​சேரி​யில் கடந்த 3 மாதங்​களாக ‘ஓஏஜி’ என்ற ‘மொபைல் ஆப்’ வழியே பல்​வேறு தவணை முறை​களில் முதலீடு செய்​தால் நாள்​தோறும் ரொக்​கப் பணம் தரு​வதாக அறி​வித்​துள்​ளனர்.

அதன்​படி ரூ.2 ஆயிரம் முதலீடு செய்​தால் தினம் ரூ.100, ரூ.5 ஆயிரம் முதலீடு செய்​தால் ரூ.250, ரூ.10 ஆயிரம் முதலீடு செய்​தால் ரூ.500, ரூ.19,500 முதலீடு செய்​தால் தின​மும் ரூ.700 தரு​கிறோம் என்று விளம்​பரப்​படுத்​தி​யுள்​ளனர். இதை நம்பி பலர் ஆன்​லைன் மூலம் பணத்தை செலுத்​தி​யுள்​ளனர். தொடக்​கத்​தில் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப தின​மும் பணம் வந்து கொண்​டிருந்​தது.

இவ்​வாறு பணம் பெற்​றவர்​கள் தங்​களின் நண்​பர்​கள், உறவினர்​களுக்கு இதனை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளனர். அவர்​களும் இந்த ‘ஓஏஜி ஆப்​’பில் பணம் கட்​டினர். இந்​நிலை​யில் இந்த குழு​வின் நிர்​வாகி திடீரென. வெள்​ளிதோறும் பணம் அனுப்​புவோம் என்று கூறி அனுப்​பி​யுள்​ளனர். இதற்கிடையே கடந்த 3 வாரங்​களாக யாருக்​குமே பணம் வராத​தால், பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் புதுச்​சேரி இணை​ய​வழி காவல் நிலை​யத்​தில் இதுபற்றி புகார் அளித்தனர்.

இது​வரை கிடைத்த தகவல்​படி 530 நபர்​களுக்கு மேல் பல கோடி ரூபாய் பணத்தை செலுத்தி இருப்​பது தெரிய வந்​துள்​ளது. இதுபற்றி புதுச்​சேரி இணை​ய​வழி முது​நிலை காவல் கண்​காணிப்​பாளர் நித்யா கூறும்​போது, “அதிக லாபம் கிடைக்​கிறது என்று நினைத்து இது​போன்று சிக்கி பணத்தை இழந்து வரு​கின்​றனர். எனவே, இணை​ய​வழி ‘ஆப்​’பில் யாரும் முதலீடு செய்து ஏமாற வேண்​டாம்’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x