Published : 27 Aug 2025 07:28 AM
Last Updated : 27 Aug 2025 07:28 AM

கோவை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,875 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள். | படம்: ஜெ.மனோகரன் |

கோவை: கோவை வழி​யாக கேரளா​வுக்கு கடத்த முயன்ற 1,875 கிலோ ஜெலட்​டின் குச்​சிகளை பறி​முதல் செய்த போலீ​ஸார், ஒருவரைக் கைது செய்​தனர். கோவை மாவட்​டம் பாலக்​காடு வழி​யாக கேரளா​வுக்கு வெடிபொருள் கடத்​தப்​படு​வ​தாக போலீஸுக்​குத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, கோவை எஸ்​.பி. கார்த்​தி​கேயன் உத்​தர​வின் பேரில், ஆய்​வாளர் நவநீதகிருஷ்ணன் தலை​மையி​லான மதுக்​கரை போலீ​ஸார் மற்​றும் கோவை மண்டல தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் நேற்று அதிகாலை மதுக்​கரை எல் அண்டு டி புறவழிச் சாலை​யில் உள்ள மரப்​பாலம் பகு​தி​யில் வாகன சோதனையில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, சந்​தேகப்​படும் வகை​யில் வந்த வேனை நிறுத்​திச்சோதனை​யிட்​ட​தில், உள்ளே பெட்டி பெட்​டி​யாக ஜெலட்​டின் குச்​சிகள் வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது.

மொத்​தம் 75 பெட்​டிகளில் 1,875 கிலோ எடை கொண்ட, 15,000 ஜெலட்​டின் குச்​சிகள் வேனில் இருந்​தன. தொடர்ந்​து, வேனை​யும், ஜெலட்​டின் குச்​சிகளை​யும் போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். பின்​னர், வேன் ஓட்டுநரை காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

விசா​ரணை​யில், வேனை ஓட்டி வந்​தவர் கேரள மாநிலம் மலப்​புரம் மாவட்​டம் ஹரிம்​பரா பகு​தி​யைச் சேர்ந்த சுபேர்​(42) என்​பது தெரிந்​தது. வெடிபொருள் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் அவரை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த ஜெலட்​டின் குச்​சிகளை சேலத்​தில் வாங்​கி, கோவை வழி​யாக கேரளா​வுக்கு கடத்​திச் செல்ல முயன்​றது தெரிய​வந்​தது.

கேரளா​வில் கிணறுகள் தோண்​ட​வும், குவாரி​களில் பயன்​படுத்​த​வும் அவற்றை வாங்​கிச் சென்​றிருக்​கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து மதுக்​கரை ஆய்​வாளர் நவநீத கிருஷ்ணன் கூறும்​போது, “உரிய ஆவணங்​களின்​றி, சட்ட விரோத​மாக கொண்டு செல்​லப்​பட்ட ஜெலட்​டின் குச்​சிகள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. வேன் ஓட்​டுநர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். இதில் தொடர்​புடைய மேலும் 3 பேரை தேடி வரு​கிறோம்’’ என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x