Published : 24 Aug 2025 12:38 PM
Last Updated : 24 Aug 2025 12:38 PM

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக போலி ஆதார் அட்டை தயாரித்த 10 பேர் கைது

லக்னோ: உ.பி. மாநில கூடுதல் போலீஸ் டிஜிபி (சட்டம்-ஒழுங்கு மற்றும் எஸ்டிஎஃப்) அமிதாப் யாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசம், நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியேற வசதியாக ஒரு கும்பல் போலி ஆதார் அட்டை தயாரிப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல் வந்தது.

இதையடுத்து உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் சோதனை நடத்தினோம். இதில் ஓர் இடத்தில் 8 பேரும், சஹ்ரான்பூரில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். 9 மாநிலங்களில் இதுபோன்று இவர்கள் போலியான ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை தயார் செய்து அதை நேபாளம், வங்கதேசம், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x