Published : 24 Aug 2025 12:39 AM
Last Updated : 24 Aug 2025 12:39 AM

திருச்சி காவல் நிலையத்தில் ஒப்பந்ததாரரை தாக்கிய ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு தலா ஒரு மாதம் சிறை தண்டனை

திருச்சி: ​சென்னை விரு​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் பசுப​தி. கட்​டிட ஒப்​பந்​த​தா​ரர். இவருக்​கும், அதே பகு​தி​யைச் சேர்ந்த ரவி, வளர்​மதி ஆகியோ​ருக்​கும் முன்​விரோதம் இருந்​துள்​ளது.

2016-ல் இருதரப்​பினருக்​கும் ஏற்​பட்ட தகராறு தொடர்​பாக, பசுப​தி, அவரது மனைவி கலா​வ​தி, மகன்​கள் தென்​னரசு, தமிழ்ச்​செல்​வன், ரமேஷ், விவே​கானந்​தன் ஆகியோர் மீது அப்​போது விரு​கம்​பாக்​கம் காவல் ஆய்​வாள​ராக இருந்த ஜெய​ராஜ் வழக்​குப் பதிவு செய்​தார்.

முன்ஜாமீன் தளர்வு... தொடர்ந்​து, பசுபதி மற்​றும் அவரது குடும்​பத்​தினர் சென்னை உயர் நீதி​மன்​றத்தை அணுகி, நிபந்​தனை முன்​ஜாமீன் பெற்​றனர். அதன்​பின், திருச்​சி​யில் குடும்​பத்​துடன் தங்​கி​யிருந்து கன்​டோன்ட்​மென்ட் காவல் நிலை​யத்​தில் கையெழுத்​திட்டு வந்​தனர். பின்​னர், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​து, கன்​டோன்​மென்ட் காவல் நிலை​யத்​தில் கையெழுத்​திட, திருச்​சி​யில் தங்​கி​யிருக்க தேவை​யில்லை என்ற தளர்வு பெற்​றனர்.

இந்த உத்​தரவு நகலை அளிப்​ப​தற்​காக பசுப​தி, தனது குடும்​பத்​தினருடன் கன்​டோன்​மென்ட் காவல் நிலை​யத்​துக்கு வந்​துள்​ளார். அப்​போது அங்​கிருந்த விரு​கம்​பாக்​கம் காவல் ஆய்​வாளர் ஜெய​ராஜ், அவரது ஜீப் ஓட்​டுநர் கண்​ணன், வடபழனி காவல் உதவி ஆய்​வாளர் விஜய​பாண்​டியன் ஆகியோர் சேர்ந்து பசுபதி மற்​றும் அவரது குடும்​பத்​தினரை சரமாரி​யாக தாக்​கி​யுள்​ளனர்.

சிபிசிஐடி விசாரணை: இது தொடர்​பாக பசுபதி தரப்​பினர் திருச்சி ஜே.எம்-2 நீதி​மன்​றத்​தில் புகார் அளித்​தனர். இதுகுறித்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​து​மாறு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. அதன்​படி கன்​டோன்​மென்ட் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். ஆனால், குற்​றத்​தின் தன்​மைக்கு ஏற்ப வழக்​குப் பதிவு செய்​யப்​பட​வில்லை என்​ப​தால், சிபிசிஐடி விசா​ரிக்க உத்​தர​விடக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பசுபதி மனுத்​தாக்​கல் செய்​தார். அதன்​பின், உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​பேரில் சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்​தனர்.

வழக்கை விசா​ரித்த நீதிபதி சுப்​பிரமணி​யன், குற்​றம் சாட்​டப்​பட்ட காவல் ஆய்​வாளர் ஜெய​ராஜ், உதவி ஆய்​வாளர் விஜய​பாண்​டியன், ஜீப் ஓட்​டுநர் கண்​ணன் ஆகியோரின் ‘குற்​ற​முறு செயல்’ நிரூபிக்​கப்​பட்​டுள்​ள​தால், 3 பேருக்​கும் தலா ஒரு மாதம் சிறை தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x