Published : 23 Aug 2025 06:03 AM
Last Updated : 23 Aug 2025 06:03 AM

திருச்சி | பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களை போதையில் தாக்கிய 3 பேர் கைது

திருச்சி: ​பார​தி​தாசன் பல்​கலைக்​கழக மாணவர்​களை மது, கஞ்சா போதை​யில் தாக்​கிய 3 பேர் நேற்று கைது செய்​யப்​பட்​டனர்.
திருச்​சி - புதுக்​கோட்டை சாலை​யில் உள்ள பார​தி​தாசன் பல்​கலை கழக மாணவர்​கள் பிர​பாகரன், விஸ்​வா, ஹரீஷ் ஆகியோர் நேற்று முன்​தினம் இரவு பல்​கலைக்​கழகம் எதிரே​யுள்ள கடை​யில் டீ குடித்​துக் கொண்​டிருந்​தனர். அப்​போது அங்கு மது, கஞ்சா போதை​யில் வந்த சிலர் மாணவர்​களிடம் தகராறு செய்​ததுடன், அவர்​களை கொடூர​மாக தாக்கி விட்டு அங்​கிருந்து தப்​பிச் சென்​றனர்.

இதைக் கண்​டித்​தும், தாக்​குதல் நடத்​தி​ய​வர்​களைக் கைது செய்​யக் கோரி​யும் பல்​கலைக்​கழக மாணவர்​கள் நேற்று முன்​தினம் நள்​ளிர​வில் திருச்​சி-புதுக்​கோட்டை நெடுஞ்​சாலை​யில் மறியலில் ஈடு​பட்​டனர். தகவலறிந்து வந்த நவல்​பட்டு போலீ​ஸார், மாணவர்​களை தாக்​கிய​வர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என உறு​தி​யளித்​ததைத் தொடர்ந்​து, மாணவர்​கள் போராட்​டத்​தைக் கைவிட்​டு, அங்​கிருந்து கலைந்து சென்​றனர்0.

இந்​நிலை​யில், மாணவர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக, பல்​கலைக்​கழகம் அரு​கில் உள்ள வடக்கு வீரம்​பட்டி பகு​தியை சேர்ந்த மணி​கண்​டன் உட்பட 3 பேரை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

இதுகுறித்து பல்​கலைக்​கழக மாணவ, மாணவி​கள் கூறியது: 2 ஆயிரம் ஏக்கர் பரப்​பில் அமைந்​துள்ள பல்​கலைக்​கழக வளாகத்​துக்கு சுற்​றுச்​சுவர் கிடை​யாது. இதனால், அரு​கில் உள்ள கிராமங்​களைச் சேர்ந்த இளைஞர்​கள் சிலர் பல்​கலைக்​கழகத்​துக்​குள் அத்​து​மீறி உள்ளே நுழைந்து மது அருந்​து​வது, கஞ்சா புகைப்​பது போன்ற சமூக விரோத செயல்​களில் ஈடு​படு​கின்​றனர்.

இதை தட்​டிக் கேட்​கும் பேராசிரியர்​கள், மாணவர்களைத் தாக்​கு​கின்​றனர். எனவே, மாணவர்​களின் பாது​காப்பை உறுதிசெய்​யும் வகையில் சுற்​றுச்​சுவர் கட்ட வேண்​டும் என்று அவர்கள் தெரி​வித்​தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x