Published : 22 Aug 2025 06:15 AM
Last Updated : 22 Aug 2025 06:15 AM

மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் பெற்றுத் தருவதாக ரூ.32 லட்சம் மோசடி: போலி சுகாதாரத் துறை அதிகாரி கைது

ரம்யா

சென்னை: கன்​னி​யாகுமரி மாவட்​டத்தை சேர்ந்​தவர் ரோஸ்​மேரி (45). இவர் கடந்த 2022-ம் ஆண்டு தனது மகளை மருத்​து​வக்​ கல்லுரி​யில் எம்​பிபிஎஸ் படிப்​பில் சேர்க்க முயற்சி மேற்​கொண்​டார். அப்​போது, அவருக்கு சென்னை சோழிங்​க நல்​லூரைச் சேர்ந்த ரம்யா (37) என்​பவரது அறி​முகம் கிடைத்​தது. அவரிடம் ரம்யா தான் சுகா​தா​ரத் துறை​யில் அதி​காரி​யாக இருப்​ப​தாக கூறி இருக்கிறார்.

மேலும், தான் நினைத்​தால் எம்​பிபிஎஸ் சீட் பெற்​றுக் கொடுக்க முடி​யும் என தெரி​வித்​துள்​ளார். இதை உண்மை என நம்​பிய ரோஸ்​மேரி, பல்​வேறு தவணை​களாக ரூ.60 லட்​சம் கொடுத்​துள்​ளார். சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் உள்ள டிஎம்​எஸ் அலு​வல​கத்​தில் வைத்து இந்த பணத்தை ரம்யா வாங்கி உள்​ளார்.

அப்​போது, மருத்​து​வக் கல்​லூரி டாக்​டர் என்று அந்​தோணி​தாஸ் என்​பவரை​யும் அறி​முகம் செய்து வைத்​துள்​ளார். இதைத் தொடர்ந்​து, ரோஸ்​மேரி​யிடம் உங்​கள் மகளுக்கு மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் படிப்​ப​தற்கு அட்​மிஷன் கிடைத்து விட்​டது என்று கூறி, உத்​தரவை காண்​பித்​து,விடுதி கட்​ட​ண​மாக ரூ.1.38 லட்​சம் செலுத்த வேண்​டும் என்று ரம்​யா, அந்​தோணி​தாஸ் வாங்கி உள்​ளனர்.

இந்​நிலை​யில், தனது மகளைமருத்​து​வக்​கல்​லூரி​யில் சேர்ப்​ப​தற்கு ஆசை​யாக அழைத்து சென்ற போது​தான் ரம்​யா, அந்​தோணி​தாஸ் ஆகியோர் போலி​யான அட்​மிஷன் ஆர்டர் கொடுத்து ஏமாற்றி இருப்பது தெரிய வந்​தது. இதைத்தொடர்ந்​து, பண மோசடி​யில் ஈடு​பட்ட ரம்​யா, அந்​தோணி​தாஸ் ஆகியோ​ருக்கு ரோஸ்​மேரி தொடர்ந்து அழுத்​தம் கொடுத்து பணத்தை மீட்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டார்.

இதனால், அவர்​கள் 2 பேரும் பல்​வேறு தவணை​களாக ரூ.29.50 லட்​சத்தை திரும்ப கொடுத்​துள்​ளனர். ஆனால், மீத​முள்ள ரூ.31.88 லட்​சத்தை திரும்ப கொடுக்​காமல் ஏமாற்றி உள்​ளனர். இந்த மோசடி தொடர்​பாக சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் தெரிவிக்​கப்​பட்​டது.

இது தொடர்​பாக, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார்வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்​தினர். இதில், ரம்​யா, சுகா​தா​ரத் துறை அதி​காரி இல்லை என்​பதும், அவர் பொய்​யான தகவலை கூறி ரோஸ் மேரியை மோசடி வலையில் வீழ்த்தி இருப்​பதும் தெரிய வந்​தது.

அதே போல், அந்​தோணி​தாசும் டாக்​டர் இல்லையென கண்​டறிந்​தனர். இதையடுத்​து, ரம்யா கைது செய்​யப்​பட்​டார். இவர் மீது ஏற்​க​னவே சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில், மருத்​துவ கல்​லூரி​யில் சீட் வாங்கி தரு​வ​தாக கூறி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்​கு​கள் நிலு​வை​யில் இருப்​பது தெரிய வந்​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். புகாருக்​குள்​ளான அந்​தோணி​தாசிடம் போலீ​ஸார்​ தொடர்ந்​து வி​சா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x