Published : 22 Aug 2025 07:12 AM
Last Updated : 22 Aug 2025 07:12 AM

அன்னூர் அருகே போதை இளைஞர் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

உயிரிழந்த சகுந்தலா. (அடுத்த படம்) பொதுமக்களை தாக்கிய ரஞ்சித்.

கோவை: கோவை மாவட்​டம் அன்​னூர் அரு​கே​யுள்ள சொக்​கம்​பாளை​யம் பகு​தி​யில் நேற்று மதி​யம் இளைஞர் ஒரு​வர் போதை​யில் சாலை​யில் தள்​ளாடியபடியே வந்​தார். திடீரென அவர் சாலை​யில் கிடந்த கற்​களை எடுத்​து, நடந்து சென்​றவர்​கள் மீது வீசி​னார்.

இதில், அங்கு சென்ற சின்​ன​சாமி(65), வேலுமணி, கவி​தா, கார்த்​திகா ஆகியோர் காயமடைந்​தனர். சொக்​கம்​பாளை​யத்​தைச் சேர்ந்த சகுந்​தலா(55) என்​பவர் மீது கல் விழுந்​த​தில் நிலை தடு​மாறி கீழே விழுந்​தார். அப்​போது, சகுந்​தலா​வின் தலை​யில் மீண்​டும் பெரிய கல்லை தூக்கி போட்​டார். அதில் பலத்த காயமடைந்த சகுந்​தலா அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த ​மக்​கள், அவரைப் பிடித்து தாக்​கினர். பின்​னர், அங்கு வந்த அன்​னூர் போலீ​ஸார் அந்த இளைஞரைப் பிடித்​துச் சென்​றனர். சகுந்​தலா​வின் உடல் பிரேதப் பரிசோதனைக்​காக கோவை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டது. காயமடைந்த சின்​ன​சாமி உள்​ளிட்ட 4 பேரும் அரு​கில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

பொது​மக்​கள் மீது தாக்​குதல் நடத்​தி, பெண்ணை கொலை செய்த இளைஞர் அன்​னூரைச் சேர்ந்த குமார் மகன் ரஞ்​சித்​(18) என்​பதும், அவர் கஞ்சா மற்​றும் மது போதை​யில் இருந்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்​து, போலீ​ஸார் அவரைக் கைது செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x