Published : 21 Aug 2025 06:51 AM
Last Updated : 21 Aug 2025 06:51 AM
கடலூர்: விருத்தாசலம் அருகே மரத்தில் கார் மோதியதில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூர் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு தெருக்கூத்து நடைபெற்றது.
இதைக் காண வந்த அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த ஆதினேஷ் (21), ஐயப்பன் (19), வேல்முருகன் (21), வெங்கடேசன் (25), அவரது தம்பி கவுதமன் (20), நடராஜன் (21) ஆகியோரை காரில் ஏற்றிக் கொண்டு, டீ குடிப்பதற்காக சித்தலூர் நோக்கிச் சென்றனர்.
கட்டுப்பாட்டை இழந்த கார் வழியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளனது. இதில் ஆதினேஷ், ஐயப்பன், வேல்முருகன் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த வெங்கடேசன், கவுதமன், நடராஜன் ஆகியோர், விருத்தாலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து சென்ற போலீஸார், 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT