Published : 16 Aug 2025 12:48 PM
Last Updated : 16 Aug 2025 12:48 PM

கடனை திருப்பிச் செலுத்த நிர்பந்தம்: பல்லாவரம் அருகே பெண் தற்கொலை

பொழிச்சலூர்: பல்​லா​வரத்தை அடுத்த பொழிச்​சலூர், ஞானமணி நகரை சேர்ந்​தவர் அருண் (44). இவர் தனது மனைவி வனஜா (38) மற்​றும் மகன்​களு​டன் சொந்த வீட்​டில் வசித்து வரு​கிறார். மாற்​றுத் திற​னாளி​யான அருண், பெயிண்​டிங் டிசைனர் ஆக பணிபுரிந்து வந்த நிலை​யில், அவரது மனைவி வனஜா இல்​லத்​தரசி​யாக இருந்து வந்​தார்.

அருண் குடும்ப செல​வுக்​காக கொடுக்​கும் பணத்​தில் சிறிது சிறி​தாக ஆன்​லைன் ஷேர் மார்க்​கெட்​டில் வனஜா முதலீடு செய்து வந்த​தாக கூறப்​படு​கிறது. ஒரு கட்​டத்​தில் அளவுக்கு அதி​க​மாக ஆன்​லைனில் முதலீடு செய்ய விரும்​பிய வனஜா, மகளிர் சுய உதவிக் குழுக்​களில் கடன் பெற்று அந்த பணத்​தை​யும் ஆன்​லைன் ஷேர் மார்க்​கெட்​டில் முதலீடு செய்​யத் தொடங்​கி​னார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்​டு​களுக்கு முன் தனது வீட்​டுக்​குத் தெரி​யாமல், தனி​யார் வங்​கி​யில் ரூ.2.5 லட்​சம் கடன் பெற்​று, அந்தப் பணத்​தை​யும் பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்​தார். இவ்​வாறு கடன் வாங்​கி, ஆன்​லைன் பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்த வனஜாவுக்​கு, எந்​த​வித பணமும் இரட்​டிப்​பாக மட்​டுமின்றி அவர் செலுத்​திய அசல் பணம் கூட திரும்​பக் கிடைக்​காமல் ஏமாற்​றமே மிஞ்​சி​யது. இதனால் மனமுடைந்த வனஜா, சமீப கால​மாக வங்​கி​யில் வாங்​கிய கடனை கட்டமுடி​யாமல் அவதிக்​குள்​ளா​னார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் வங்கி ஊழியர்​கள் இவரது வீட்​டுக்கு வந்து வாங்​கிய கடனை திருப்​பிச் செலுத்​து​மாறு கறா​ராக கூறிச் சென்​றனர். இதனால் தான் அவமானம் அடைந்​த​தாகக் கரு​திய வனஜா, நேற்று முன்​தினம் வீட்​டில் யாரும் இல்​லாத நேரத்​தில், கதவை உள்​பக்​க​மாக பூட்​டிக் கொண்டு தற்​கொலை செய்து கொண்​டார்.

வெளி​யில் சென்​றிருந்த அருண், மகன்​கள் வந்து பார்த்​த​போது, கதவு உள்​பக்​க​மாக பூட்டி இருந்​தது. அக்​கம் பக்​கத்​தினர் உதவி​யுடன் கதவை உடைத்​து, உள்ளே சென்று பார்த்​த​போது தான், அங்கு வனஜா தூக்​கிட்டு உயி​ரிழந்த நிலை​யில் இருப்​பது தெரிய​வந்​தது. தகவல் அறிந்​ததும் சம்பவ இடத்​துக்குவிரைந்து சென்ற சங்​கர் நகர் போலீ​ஸார், உடலை மீட்டு தாம்​பரம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பிவைத்​தனர். மேலும், வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்கின்​றனர்.

இதனிடையே வனஜா​வின் கைபேசியை போலீ​ஸார் ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் அவர் தற்​கொலை செய்து கொள்​வதற்கு முன்​பாக பதிவு செய்து வைத்​திருந்த மூன்று ஆடியோக்​கள் இருந்​தது தெரிய வந்​தது. அதில் ஓர் ஆடியோ​வில் தான் தனி​யார் வங்​கி​யில் ரூ.2.5 லட்​சம் கடன் வாங்​கிய​தால் தனக்கு என்ன செய்​வதென்றே தெரிய​வில்லை என்​றும், தன்​னை மன்​னித்​து விடுங்​கள்​ என்​றும்​ கூறி​யிருந்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x