Published : 13 Aug 2025 05:52 AM
Last Updated : 13 Aug 2025 05:52 AM

மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை மேயரின் கணவர், உதவி ஆணையர் கைது

பொன்.வசந்த், சுரேஷ்குமார்

மதுரை: மதுரை மாநக​ராட்​சி​ சொத்​து​வரி முறை​கேடு வழக்​கில் இது​வரை 14 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்​. இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட கண்​ணன் அளித்த வாக்​குமூலத்​தில்​, மேயர் இந்​தி​ராணி​யின் கணவர் பொன் வசந்த், மாநக​ராட்சி எதிர்க்கட்சித் தலை​வர் சோலை​ராஜா மற்​றும் 3 கவுன்​சிலர்​கள் சொத்​து​வரி குறைப்பு விவ​காரத்​தில் ஈடு​பட்​ட​தாகத் தெரி​வித்​தார்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த அதி​முக​வினர், முன்​னாள் அமைச்​சர் செல்​லூர் கே.​ராஜு தலை​மை​யில் நேற்று முன்​தினம் டிஐஜி அபினவ் குமாரிடம், விசா​ரணை அதி​காரி​களை மாற்ற வேண்​டும் என்று புகார் தெரி​வித்​தனர். இந்த வழக்​கில் கண்​ணன் அளித்துள்ள வாக்​குமூலம் திடீர் திருப்​பத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்​நிலை​யில்​, இந்த வழக்​கில் மதுரை மாநக​ராட்சி மேயர் இந்​தி​ ராணி​யின் கணவர் பொன்​.வசந்த்தை போலீ​ஸார் சென்​னை​யில் நேற்று கைது செய்​தனர். மதுரை நீதி​மன்​றத்​தில் இன்று ஆஜர்​படுத்தி காவலில் எடுக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்துள்​ளனர்​. மனை​வி​யான மேயர் இந்​தி​ராணி​யின் அதி​காரத்​தைப் பயன்​படுத்தி சொத்​து​வரி முறை​கேட்​டில் ஈடுபட்​டாரா என்பது குறித்து முழு​மை​யாக விசா​ரிக்க போலீ​ஸார் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

மேலும், மதுரை​யில் பணி​யாற்றி, தூத்​துக்​குடி மாநக​ராட்​சிக்​குப் பணி மாறு​தலாகிச் சென்ற உதவி ஆணை​யர் (கணக்​கு​கள்) சுரேஷ்கு​மாரை (59) போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்ட சுரேஷ்கு​மார் மதுரை மத்​திய சிறையில் அடைக்​கப்​பட்​டார்.

கைதான சுரேஷ்கு​மார், மதுரை மண்​டலம்​-3-ல் உள்ள ஹோட்​டல் ஒன்​றுக்கு வரி நிர்​ண​யம் செய்​த​தில் முறை​கேடு செய்​திருப்​பது தெரிய​வந்​தது. இவரது பணிக்​காலத்​தில் வேறு எந்​தெந்த கட்​டிடங்​களுக்​குச் சொத்​து​வரி குறைப்பு நடந்​தது, அதற்கு உடந்​தை​யாக இருந்த கவுன்​சிலர்​கள், ஊழியர்​கள் பட்​டியலும் வெளி​யாக வாய்ப்​புள்​ள​தால் கைது நடவடிக்கை மேலும் தொடரும் என கூறப்படுகிறது.

கைதான உதவி ஆணை​யர் சுரேஷ்கு​மார் 1989-ம் ஆண்டு முதல் மதுரை மாநக​ராட்​சி​யில் பணிபுரிந்து வந்​த​தாக​வும், மண்​டலம்-3 அலு​வல​கத்​தில் உதவி ஆணை​ய​ராக​வும், மைய அலு​வல​கத்​தில் உதவி ஆணை​ய​ராக​வும் (கணக்​கு​கள்), மாமன்​றச் செயலராகவும்​ பணிபுரிந்​து வந்​தார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x