Published : 11 Aug 2025 06:23 AM
Last Updated : 11 Aug 2025 06:23 AM

விடுதியில் பிரசவித்த மாணவி; குழந்தை கீழே கிடந்ததாக காதலனுடன் சேர்ந்து நாடகம்: கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கினர்

சென்னை: விடு​தி​யில் மாணவி ஒரு​வர் குழந்​தையை பெற்​றெடுத்​து, குழந்தை கீழே கிடந்​த​தாக போலீ​ஸில் ஒப்​படைத்து காதலனுடன் சேர்ந்து நாடக​மாடிய சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

சென்னை ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வ​மனைக்குகையில் கட்​டைப்​பை​யுடன் இளைஞர் ஒரு​வர் நேற்று முன் தினம் மதி​யம் வந்​தார். அந்த கட்​டைப்​பையை அங்கு பாதுகாப்பு பணி​யில் இருந்த போலீ​ஸாரிடம் அவர் கொடுத்​தார். அதை வாங்கி பார்த்த போலீ​ஸார், கட்​டைப்​பை​யில் பச்​சிளம் குழந்தை இருந்​ததை கண்டு அதிர்ச்சி அடைந்​தனர்.

அப்​போது, அந்த இளைஞர், ‘நான் சாலை​யில் நடந்து சென்று கொண்​டிருந்​தேன். கட்​டைப்​பை​யில் வைத்​த​வாறு இந்த குழந்தை கீழே கிடந்​தது,’ என தெரி​வித்​தார். இதையடுத்து போலீ​ஸார், அந்த இளைஞரிடம் குழந்தை எந்த இடத்​தில் கிடந்​தது? எப்​போது பார்த்​தீர்​கள்? என கேள்வி​களை எழுப்ப, இளைஞர் முன்​னுக்கு பின் முரணான பதில்​களை அளித்து வந்​தார்.

இதனால், சந்​தேகமடைந்த போலீ​ஸார், கிடுக்​கிப்​பிடி​யாக பிடித்து அந்த இளைஞரை விசா​ரிக்க, அவர், ‘மன்​னித்​து​விடுங்​கள். இந்த குழந்தை எனக்கு பிறந்​தது தான். உங்​களிடம் பொய் சொல்​லி​விட்​டேன்,’ என கூறி கதறி அழு​தார்.

இளைஞரிடம் நடத்​திய விசா​ரணை குறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: குழந்​தையை கொண்டு வந்த இளைஞர் பெயர் பிர​வீன்​(21). ஊட்​டி​யில் உள்ள கல்​லூரி​யில் படித்த போது, அதே கல்​லூரி​யில் படித்த சேலத்தை சேர்ந்த 21 வயது மாண​வி​யுடன் பழக்​கம் ஏற்பட்டு இரு​வரும் காதலித்து வந்​துள்​ளனர். பின்​னர் பிர​வீன் அரசு வேலைக்​காக சென்னை சைதாப்​பேட்​டை​யில் தங்கி படித்து வருகிறார்.

மாண​வி, கிண்​டி​யில் உள்ள விடு​தி​யில் தங்கி சென்னை பல்​கலைக்​கழகத்​தில் எம்​எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வரு​கிறார். சென்​னை​யில் இருந்​த​தால், இரு​வரும் அடிக்​கடி சந்​தித்து வந்​தனர். இதனால், மாணவி கர்ப்​பமடைந்​தார். இந்​நிலை​யில், கடந்த 8-ம் தேதி விடு​தி​யில் இருந்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்​பட்​டது. மாண​வி​யின் தோழிகள் விடு​முறைக்கு ஊருக்கு சென்​ற​தால், விடுதி கழி​வறை​யிலேயே மாணவி குழந்​தையை பெற்​றெடுத்​தார்.

இதுகுறித்து தனது காதலன் பிர​வீனுக்கு தகவல் தெரி​வித்​தார். பின்​னர், இரு​வரும் திரு​வல்​லிக்​கேணி லாட்​ஜில் அறையெடுத்து தங்​கினர். அப்​போது, இந்த விவ​காரம் வெளி​யில் தெரிந்​தால், அவமான​மாகி விடும். இரு​வருக்​கும் வேலை​யும் இல்​லை. எனவே, குழந்தை கீழே கிடந்​த​தாக கூறி போலீ​ஸில் ஒப்​படைத்​து​விடு​வோம் என முடிவு செய்​துள்​ளனர்.

இதையடுத்​து, கட்​டைப்​பை​யில் குழந்​தையை எடுத்து கொண்டு ஓமந்​தூ​ரார் மருத்​து​வ​மனைக்கு வரும் போது பிர​வீன் சிக்​கிக் கொண்​டார். தற்​போது குழந்​தை​யும், மாண​வி​யும் கஸ்​தூரி​பாய் காந்தி அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்​து தொடர்ந்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கிறோம்​ என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x