Published : 11 Aug 2025 06:40 AM
Last Updated : 11 Aug 2025 06:40 AM

பழநி அருகே வீட்டுக்குள் தந்தை, மகள் மர்ம மரணம்

பழநி: ​திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி அருகே வீட்​டில் தந்​தை, மகள் மர்​ம​மான முறை​யில் இறந்து கிடந்​தது தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். பழநி அரு​கே​யுள்ள கணக்​கம்​பட்டி ராஜ​வாரம் புதூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் பழனியப்​பன் (53). கொத்​த​னார். இவரது மனைவி விஜ​யா. இவர்​களது ஒரு மகன், ஒரு மகளுக்கு திரு​மண​மாகி​விட்​டது. இளைய மகளான தனலட்​சுமிக்கு (26) திரு​மணம் ஆகவில்​லை. ஆறாம் வகுப்பு வரை மட்​டுமே படித்​துள்ள இவருக்​கு, உடல்​நிலை சரி​யில்லை என்று கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு தனது மனை​வி, மகன், மூத்த மகள் ஆகிய மூவரை​யும் திருச்​செந்​தூர் கோயிலுக்கு பழனியப்​பன் அனுப்​பி​வைத்​தார். வீட்​டில் பழனியப்​பனும், இளைய மகள் தனலட்​சுமி மட்​டும் இருந்​தனர்.

திருச்​செந்​தூரில் இருந்து பழனியப்​பனை குடும்​பத்​தினர் செல்​போனில் தொடர்​பு​கொண்​ட​போது, அவர் போனை எடுக்​க​வில்​லை. அரு​கில் உள்ள உறவினருக்​குத் தகவல் தெரி​வித்​தனர். உறவினர் ஒரு​வர் பழனியப்​பன் வீட்​டுக்​குச் சென்று பார்த்​த​போது, தனலட்​சுமி இறந்து கிடந்​தார். அரு​கில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் பழனியப்​பனும் இறந்​துகிடந்​தார்.

தகவலறிந்து வந்த ஆயக்​குடி போலீ​ஸார் இரு​வரது உடல்​களை​யும் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக பழநி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மகளைக் கொலை செய்​து​விட்​டு, பழனியப்​பன் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டாரா அல்​லது வேறு ஏதேனும் காரணம் உள்​ளதா என்று போலீ​ஸார் தீவிர​மாக வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x