Published : 09 Aug 2025 06:53 AM
Last Updated : 09 Aug 2025 06:53 AM

சென்னை | கருத்து வேறுபாடு காரணமாக பேச மறுத்த காதலனை தாக்கிய காதலி

சென்னை: சென்னை கே.கே. நகர் அடுத்த நெசப்​பாக்​கத்​தில் வசித்து வரும் 22 வயது இளம்​பெண் ஒரு​வர் சட்​டக் கல்​லூரி​யில் முதலா​மாண்டு படித்து வரு​கிறார். இவருக்கு, அசோக் நகரில் வசித்து வரும் தச்​சுத் தொழிலா​ளி​யான 21 வயது இளைஞருடன் நட்பு ஏற்​பட்​டது. 6 ஆண்​டு​களாக காதலித்து வந்​துள்​ளனர்.

கடந்த 2 வாரங்​களுக்கு முன் இரு​வருக்​கும் இடையே சிறிய தகராறு ஏற்​பட்​டது. இதையடுத்​து, இரு​வரும் பேசுவதை நிறுத்​திக் கொண்​டனர். சில தினங்​களாக சட்​டக் கல்​லூரி மாண​வி, போனில் அழைத்​தும் அவரது காதலன் பேச மறுத்​துள்​ளார். இதனால் இளம் பெண் ஆத்​திரத்​தில் இருந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் மாலை கே.கே.நகர், ஏபி பத்ரோ சாலை வழி​யாக அந்த இளைஞர் தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்​தார். இதையறிந்த காதலி தனது 19 வயது தங்​கை​யுடன் அங்கு சென்​று, பேசாதது குறித்து கேட்​டுள்​ளார்.

இதில், இரு தரப்​பினரிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதனால் ஆத்​திரம் அடைந்த காதலி அருகே கிடந்த மரக்​கட்​டையை எடுத்து காதலனை சரமாரி​யாகத் தாக்​கி​யுள்​ளார். இதில், நிலை குலைந்த காதலன் அங்​கேயே சரிந்து விழுந்​துள்​ளார். இதையடுத்து இளம் பெண் தங்​கை​யுடன் அங்​கிருந்து சென்​று​விட்​டார்.

வைரலான வீடியோ... பலத்த காயமடைந்த இளைஞரை அவரது தாயார் மீட்டு கே.கே.நகரில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சிகிச்சைக்​காக சேர்த்​தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.
இந்நிலையில், காதலனை காதலி விரட்டி தாக்​கிய சம்பவம் தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x