Published : 08 Aug 2025 06:17 AM
Last Updated : 08 Aug 2025 06:17 AM

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: தமிழக மின் வாரி​யத்​தில் உதவிப் பொறி​யாளர் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி ரூ.18 லட்​சம் மோசடி செய்த நபரை அயனாவரம் போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை அயனாவரம், சக்​ர​வர்த்தி நகரைச் சேர்ந்​தவர் ஐயங்​கார் (62). இவரது மகள் ஹேமாவதி 2021-ம் ஆண்​டு, 2-வது பிரசவத்​துக்கு தந்தை வீட்​டுக்கு வந்​திருந்​தார்.

அப்​போது, ஹேமாவதி கணவரின் உறவின​ரான கெரு​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்த சுபத்ரா (40) மற்​றும் அவரது கணவர் சந்​துரு என்ற சந் திரசேகர் (42) ஆகியோர் ஹேமாவ​தி​யிடம், உனது கணவர் கோபி​நாத்​துக்கு தமிழக மின்​வாரி​யத்​தில் உதவிப் பொறி​யாளர் வேலை வாங்கி தரு​கிறோம்; அதற்கு ரூ.18 லட்​சம் செல​வாகும் எனவும் தெரி​வித்​தனர்.

இதை நம்​பிய ஹேமாவதி தந்தை மூலம் சுபத்ரா மற்​றும் அவரது கணவர் கேட்ட பணத்தை 4 தவணை​களாக கொடுத்​தார். பணத்தை பெற்​றுக் கொண்ட தம்​பதி உறு​தி​யளித்​த​படி வேலை வாங்​கிக் கொடுக்​க​வில்​லை. மேலும், அதற்​காக பெற்ற முன்​பணம் ரூ.18 லட்​சத்​தை​யும் திரும்ப கொடுக்​காமல் மிரட்​டி​யுள்​ளனர்.

இது தொடர்​பாக அயனாவரம் காவல் நிலை​யத்​தில் ஐயங்​கார் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசாரித்தனர். இதில் பண மோசடி நடந்​தது உறு​தி​யானது. இதையடுத்து தலைமறை​வாக இருந்த சந்​துருவை போலீ​ஸார் கைது செய்​தனர். பின்​னர், அவரை நீதி​மன்​றக் காவலில் சிறை​யில் அடைத்​தனர். இவ்​வழக்​கில் தொடர்​புடைய சுபத்​ராவை போலீ​ஸார்​ தொடர்ந்​து தேடி வருகின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x