Published : 08 Aug 2025 06:09 AM
Last Updated : 08 Aug 2025 06:09 AM

டி.பி.சத்திரம் ரவுடி கொலை விவகாரத்தில் 17 ஆண்டு காத்திருந்து பழி தீர்த்த மகன் உட்பட 3 பேர் கைது

சென்னை: தந்தை கொலைக்கு 17 ஆண்​டு​கள் காத்​திருந்து கல்​லூரி மாணவ​னான மகன் பழி தீர்த்​துள்​ளார். இக்​கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்னை டி.பி சத்​திரம் ஜோதி​யம்​மாள் நகரைச் சேர்ந்​தவர் புல்​கான் என்ற ராஜ்குமார் (42). இவருக்கு மனை​வி​யும், 2 பிள்​ளை​களும் உள்​ளனர். சுப மற்​றும் துக்க நிகழ்​வு​களுக்கு ஷாமி​யானா பந்​தல் அமைத்துக் கொடுக்​கும் தொழில் செய்து வந்​தார். ‘பி’ வகைப்​படுத்​தப்​பட்ட ரவுடி​யான இவர் மீது ஒரு கொலை உட்பட 9 குற்ற வழக்​கு​கள் உள்​ளன.

இவர் நேற்று முன்​தினம் மதி​யம் வீட்​டில் இருந்​த​போது கொலை கும்​பலால் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்​டார். இந்த கொலை தொடர்​பாக டி.பி.சத்​திரம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்து வரு​கின்​றனர். இதில், பரபரப்பு தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. சென்​னை​யில் 50 ஆண்​டு​களாக கஞ்சா வியா​பாரத்​தில் கொடிகட்​டிப் பறந்த பெண் தாதா கிருஷ்ணவேனி​யின் வளர்ப்பு மகன் எனக் கூறப்​படும் செந்​திலை கடந்த 2008-ல் கும்​பல் ஒன்று கொலை செய்​தது.

இந்த வழக்​கில் ரவுடி தீச்​சட்டி முரு​கன், ஜெய​ராஜ், பைனான்​சி​யர் ஆறு​முகம், பிரான்​சிஸ், குள்ள சுரேஷ், ராஜ்கு​மார் ஆகியோர் தொடர்​புடைய​வர்​கள். இதில் தீச்​சட்டி முரு​கன், ஜெய​ராஜ், பைனான்​சி​யர் ஆறு​முகம் ஆகியோர் வெவ்​வேறு சம்​பவங்​களில் முன் விரோதம் காரண​மாக கொலை செய்​யப்​பட்​டனர். பிரான்​சிஸ் சில ஆண்​டு​களுக்குமுன் உடல் நலக்​குறை​வால் உயி​ரிழந்​தார். செந்​தில் கொலை வழக்​கில் தொடர்​புடைய குள்ள சுரேஷ், ராஜ்கு​மார் ஆகிய இரு​வர் மட்​டுமே எஞ்​சி​யிருந்​தனர்.

கல்லூரி மாணவர்: இந்​நிலை​யில் கடந்த 10 ஆண்​டு​களாக எந்த சண்டை சச்​சர​வுக்​கும் செல்​லாமல் ராஜ்கு​மார் இருந்​துள்​ளார். அதி​முக கட்​சி​யிலும் பொறுப்​பில் இருந்​துள்​ளார். இந்​நிலை​யில்​தான் அவர் கொலை செய்​யப்​பட்​டுள்​ளார். முதற்​கட்ட விசாரணையில் கடந்த 2008-ல் செந்​தில் கொலை செய்​யப்​பட்​டதற்கு பழிக்​குப் பழி​யாக இந்த சம்​பவம் நடந்​துள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

செந்​தில் கொலை செய்​யப்​பட்​ட​போது அவரது மகன் யுவனேஷ் (தற்​போது 19 வயது) 2 வயது சிறு​வ​னாக இருந்​துள்​ளார். தற்​போது சென்​னை​யில் உள்ள ஒரு தனி​யார் கல்​லூரி​யில் பிபிஏ படித்து வரு​கிறார். படிப்பு ஒரு பக்​கம் இருந்​தா​லும் தந்​தையை கொன்றவர்களில் எஞ்​சி​யிருப்​பவர்​களை பழி​வாங்க வேண்​டும் என்ற ஆத்​திரம் இருந்​துள்​ளது.

சமீபத்​தில் ``உன் தந்தை கதையை நான்​தான் முடித்​தேன். வாலை சுருட்​டிக் கொண்டு இருக்​கணும். இல்​லை​யென்​றால் உன் தந்தையை எப்​படி வழியனுப்பி வைத்​தோமோ அதே நிலை​தான் உனக்​கும்'' என யுவனேசை பார்த்து ரவுடி ராஜ்கு​மார் மிரட்டியதாக கூறப்​படு​கிறது.

ஏற்​கெனவே தந்​தையை கொன்​றவரை பழி தீர்க்க வேண்​டும் என்ற மனநிலை​யில் இருந்த யுவனேஸுக்கு ராஜ்கு​மாரின் மிரட்​டல் மேலும் ஆத்​திரத்தை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்து தனது கல்​லூரி நண்​பர்​கள் மற்​றும் வெளி ஆட்​கள் என மொத்​தம் 9 பேருடன் சென்​று, அதில் 5 பேர் ராஜ்கு​மார் வீட்​டுக்​குள் புகுந்து அவரை சரமாரி​யாக வெட்டி கொலை செய்​த​தாக யுவனேஸ் வாக்​குமூல​மாக கூறிய​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இந்த சம்​பவம் தொடர்​பாக யுவனேஸ் மற்​றும் அவரது நண்​பர்​கள் என 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மீதம் உள்​ளவர்​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். செந்​திலின் கொலைக்கு பழிக்​குப் பழி​யாக ராஜ்கு​மார் கொல்​லப்​பட்​டா​ரா? அல்​லது வெவ்​வேறு கால​கட்​டங்​களில் ராஜ்கு​மா​ரால் பா​திக்​கப்​பட்​ட​வர்​கள் அனை​வரும் ஒன்று சேர்ந்து இந்த கொலை திட்​டத்தை செந்​தில்​ மகனை வைத்​து அரங்​கேற்​றி​னார்​களா? என்​ற கோணத்​தி​லும்​ வி​சாரணை நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x