Published : 08 Aug 2025 06:02 AM
Last Updated : 08 Aug 2025 06:02 AM

திருவிடைமருதூர் டிஎஸ்பி தாக்கியதால் காதுகள் பாதிப்பு: அவமானத்தில் தற்கொலைக்கு முயன்ற திமுக நிர்வாகி

கும்பகோணம்: திரு​விடைமருதூர் டிஎஸ்பி தாக்​கிய​தில் காதுகள் பாதிக்​கப்​பட்ட திமுக நிர்​வாகி, விஷம் குடித்து தற்​கொலைக்கு முயன்​ற​தால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. கும்​பகோணம் வட்​டம் சிவபுரம் வடக்​குத் தெரு​வைச் சேர்ந்​தவர் குமர​வேலு(40). கட்​டிட ஒப்​பந்​த​தா​ர​ரான இவர், திமுக மாவட்ட விவ​சாய அணி துணை அமைப்​பாள​ராக​வும் உள்​ளார். அங்​குள்ள மாரி​யம்​மன் கோயில் தேர் நிறுத்​தும் இடத்​தில், அதே பகு​தி​யைச் சேர்ந்த ஒரு​வர் வீடு கட்டி வந்​தார்.

அதற்கு குமர​வேலு உள்​ளிட்​டோர் எதிர்ப்பு தெரி​வித்​து, பணியை தடுத்து நிறுத்​தினர். மேலும், நாச்​சி​யார்​கோ​வில் காவல் நிலையத்​தி​லும் புகார் அளித்​தனர். இதையடுத்​து, வீடு கட்​டும் நபர் திரு​விடைமருதூர் டிஎஸ்பி ராஜு​விடம் இந்​தப் பிரச்​சினை குறித்து தெரி​வித்​துள்​ளார். பின்னர், கடந்த 3-ம் தேதி வீடு கட்​டும் பணியை மீண்​டும் தொடங்​கி​னார். அதை குமர​வேலு செல்​போனில் வீடியோ எடுத்​துள்​ளார்.

அப்​போது, அங்கு வந்த டிஎஸ்பி ராஜு, குமர​வேலுவை தகாத வார்த்​தைகளால் திட்​டி, அவரது கன்​னத்​தில் அறைந்​ததுடன், செல் போனை பறித்​துக்​கொண்​டு, நாச்​சி​யார்​கோ​வில் காவல் நிலை​யத்​துக்கு அவரை அழைத்​துச் சென்​றுள்​ளார். பின்​னர், இரவில் அவரை போலீ​ஸார் விடு​வித்​துள்​ளனர்.

இதற்​கிடையே, குமர​வேலு தன்​னிடம் கத்​தி​யைக் காட்டி மிரட்டி ரூ.300 பறிக்க முயன்​ற​தாக, வீடு​கட்டி வந்த நபர் நாச்​சி​யார்​கோவில் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். டிஎஸ்பி அறைந்​த​தால் குமர​வேலு​வுக்கு காதுகள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. மேலும், பணம் பறித்​த​தாக புகார் கொடுத்​த​தா​லும், பொது​மக்​கள் முன்​னிலை​யில் டிஎஸ்பி தாக்​கிய​தா​லும் அவமானமடைந்த குமர​வேலு நேற்று முன்​தினம் விஷமருந்தி தற்​கொலைக்கு முயன்​றுள்​ளார்.

இதையறிந்த, நண்​பர்​கள், உறவினர்​கள் குமர​வேலுவை மீட்​டு, கும்​பகோணம் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இது தொடர்​பாக குமர​வேலு மனைவி மாரி​யம்​மாள், தஞ்​சாவூர் எஸ்​.பி.​யிடம் புகார் அளித்​துள்​ளார்.

இதுகுறித்து டிஎஸ்பி ராஜு​விடம் கேட்​ட​போது, “நடந்த சம்​பவத்தை மிகைப்​படுத்தி கூறுகிறார்​கள். இந்த விவ​காரத்தை சமூகப் பிரச்​சினை​யாக கொண்டு செல்​கின்​றனர். நான் அவரை அடிக்​க​வில்​லை” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x