Published : 07 Aug 2025 06:22 AM
Last Updated : 07 Aug 2025 06:22 AM

சென்னை | சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி 50 வயது மதிக்கத்தக்க ஆண் அடித்துக் கொலை

சென்னை: சிறுமி​யிடம் தவறாக நடந்து கொண்​ட​தாகக் கூறி, 50 வயது மதிக்கத்தக்க ஆண் அடித்​துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்​பாக நண்​பர்​கள் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை வியாசர்​பாடி, ஜீவா ரயில் நிலை​யம் அருகே கடந்த 31-ம் தேதி அதி​காலை 3 மணி​யள​வில் 50 வயது மதிக்​கத்​தக்க ஆண் ஒரு​வரை இளைஞர்​கள் இரு​வர் சரமாரி​யாக கட்டை​யால் தாக்​கினர். அந்த வழி​யாகச் சென்​றவர்​கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்​தம் போடவே 2 இளைஞர்​களும் தப்பி ஓடி​விட்​டனர்.

தகவல் அறிந்து வியாசர்​பாடி போலீ​ஸார் நிகழ்​விடம் விரைந்து தாக்​குதலுக்கு உள்​ளானவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்​து​வ மனையில் சேர்த்​தனர். அங்கு தீவிர சிகிச்​சைப் பிரி​வில் சேர்க்​கப்​பட்​டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதி​காலை இறந்தார். இக்​கொலை தொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில் அவரை அடித்​துக் கொலை செய்​தது வியாசர்​பாடி கன்​னி​காபுரத்​தைச் சேர்ந்த ஆசிப் என்ற கார்த்​திக் (23), அதேபகுதி சஞ்​சய் நகரைச் சேர்ந்த அலெக்ஸ் (27) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்தனர். பின்​னர் அவர்​களை நீதி​மன்​றக் காவலில் சிறை​யில் அடைத்​தனர்.

முன்​ன​தாக கொலை செய்​தது ஏன் என போலீ​ஸாரிடம் கார்த்​திக் கூறும்போது, ``சம்​பவத்​தன்று அதி​காலை எனது சகோ​தரி மகளிடம் அவர் சில்​மிஷத்​தில் ஈடு​பட்​டார். இதையறிந்த எனக்கு ஆத்​திரம் ஏற்​பட்​டது. எனவே நண்​ப​ரான அலெக்ஸை அழைத்​துக் கொண்​டு, இரு​வரும் சேர்ந்து அவரைத் தாக்​கினோம்'' என கார்த்​திக் தங்​களிடம் வாக்​குமூல​மாக கூறிய​தாக போலீ​ஸார் தெரி​வித்தனர். இதற்கிடையே, கொலையான நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்​தவர்? என்பது குறித்து போலீ​ஸார்​ வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x