Published : 07 Aug 2025 05:41 AM
Last Updated : 07 Aug 2025 05:41 AM

கோவை கடைவீதி காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

உள்படம்: அறிவொளி ராஜன்

கோவை: கோவை​யில் காவல் நிலை​யத்​தில் எஸ்​.ஐ. அறை​யில் தொழிலாளி தூக்​கிட்டு தற்​கொலை செய்​து​கொண்​டது தொடர்பாக போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். கோவை வைஸ்​யாள் வீதி​யில் உள்ள கடைவீதி காவல் நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் இரவு தலை​மைக் காவலர் செந்​தில்​ கு​மார் பணி​யில் இருந்​தார்.

நள்​ளிர​வில் சுமார் 60 வயதான ஒரு​வர் அங்கு வந்​து, யாரோ தன்னை தாக்​கு​வதற்​காக பின் தொடர்ந்து வரு​வ​தாக தெரி​வித்துள்ளார். செந்​தில்​கு​மார் வெளியே வந்து பார்த்​த​போது யாரும் இல்​லை. இதையடுத்​து, அந்​த நபரை அனுப்​பி​விட்​டு, செந்​தில்​குமார் காவல் நிலை​யத்​துக்கு திரும்​பி​னார்.

இந்​நிலை​யில், நேற்று காலை உதவி ஆய்​வாளர் நாக​ராஜ் முதல் தளத்​தில் உள்ள தனது அறைக்​குச் சென்​றார். அறைக்​கதவு உள் பக்​க​மாக தாழிடப்​பட்டு இருந்​தது. உள்ளே பார்த்​த​போது ஒரு​வர் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் இறந்து கிடந்​தது தெரிய​வந்​தது. உடனடி​யாக போலீ​ஸார் அறைக்​கதவை உடைத்​து, சடலத்தை மீட்​டனர்.

விசா​ரணை​யில், இறந்து கிடந்​தவர் பேரூர் சாமிசெட்​டி​பாளை​யத்​தைச் சேர்ந்த அறிவொளி ராஜன்​(60) என்​பதும், திரு​மண​மா​காத அவர், பேரூரில் தனது சகோ​தரி குடும்​பத்​தினருடன் தங்​கி, கட்​டு​மான வேலைக்​குச் சென்று வந்​ததும் தெரிய​வந்​தது. இதுகுறித்து தகவலறிந்த காவல் ஆணை​யர் ஆ.சர​வணசுந்​தர், துணை ஆணை​யர் கார்த்​தி​கேயன் ஆகியோர் அங்கு வந்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணை​யர் ஆ.சர​வணசுந்​தர் கூறும்​போது, “பு​கார் தெரி​வித்​தவுடன் காவலர் செந்​தில்​கு​மார், அந் நபரை விசா​ரித்து அனுப்​பி​யுள்​ளார். பின்​னர், காவலருக்​குத் தெரி​யாமல், உள்ளே நுழைந்​து, உதவி ஆய்​வாளர் அறை​யில் தூக்கிட்டு தற்​கொலை செய்​துள்​ளார். அறிவொளி ராஜன் கடந்த சில நாட்​களாக மனநிலை பாதிக்​கப்​பட்ட நிலை​யில் இருந்துள்ளார்.யாரோ தன்னை பின்​தொடர்​வ​தாக​வும், தாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாக​வும் குடும்​பத்​தினரிட​ம் தெரி​வித்துள்​ளார்” என்றார்.

இதற்​கிடை​யில், அறிவொளி​ ராஜன் நேற்று முன்​தினம் மதி​யம் நீதி​மன்ற வளாகத்​துக்​குச் சென்​று,தன்னை யாரோ தாக்குவதாகவும் அங்​கிருந்​தவர்​களிடம் தெரி​வித்​துள்​ளது விசா​ரணை​யில் தெரிய ​வந்​தது. காவல் நிலையத்தில் தொழிலாளி தற்கொலைக்கு பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆயுதப்​படைக்கு மாற்​றம்: இதற்​கிடையே, காவல் நிலை​யத்​தில் ஜுடீசி​யல் மாஜிஸ்​திரேட் விசாரணை நடத்தினார். பின்​னர், பணியில் கவனக்​குறை​வாக இருந்​த​தாக காவலர் செந்​தில்​ கு​மார், உதவி ஆய்​வாளர் நாக​ராஜ் ஆகியோரை மாநகர ஆயுதப்​படைக்கு மாற்றி காவல் ஆணை​யர் உத்​தர​விட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x