Published : 06 Aug 2025 06:10 AM
Last Updated : 06 Aug 2025 06:10 AM

கீழ்ப்பாக்கத்தில் முதுநிலை மருத்துவ மாணவி தற்கொலை: போலீஸார் விசாரணை

சென்னை: திரு​வள்​ளூர் டவுன் பகு​தி​யைச் சேர்ந்​தவர் திவ்யா (26). வேலூர் அரசு கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் முடித்​து​விட்​டு, மருத்​துவ மேல் படிப்​புக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் முது​நிலை பொது மருத்​து​வம் 2-ம் ஆண்டு படித்து வந்​தார்.

வேலூரில் மருத்​து​வம் படித்​த​போது தங்​கப் பதக்​கம் பெற்​றிருந்​தார். சென்​னை​யில் டி.பி. சத்​திரம் தர்​ம​ராஜா கோவில் தெரு​வில் தனி​யாக அறை எடுத்து தங்​கி​யிருந்​தார். அவருக்​கு, கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் முது​நிலை மருத்​து​வம் படித்து வந்த சக மாணவர் ஒரு​வருடன் காதல் ஏற்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

வெவ்​வேறு சமூகம் என்​ப​தால், முதலில் இரு​வரின் குடும்​பத்​தினரும் காதலுக்கு எதிர்ப்பு தெரி​வித்​த​தாக​வும், பின்​னர் இரு குடும்பத்​தினரும் சமா​தான​மாகி​விட்​ட​தாக​வும், படிப்பு முடிந்​ததும் திரு​மணம் செய்து வைக்க முடிவு செய்​திருந்​த​தாக​வும் கூறப்படு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று காலை நீண்ட நேர​மாகி​யும் மாணவி வீட்​டின் கதவு திறக்​காத​தால் சந்​தேகம் அடைந்த வீட்​டின் உரிமையாளர், திவ்​யா​வின் தோழிகளுக்கு தகவல் தெரி​வித்​துள்​ளார். அவர்​கள் டி.பி. சத்​திரம் போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்துள்​ளனர். போலீ​ஸார் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே பார்த்​த​போது திவ்யா தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடலமாகக் கிடந்​தார்.

இதையடுத்து, போலீ​ஸார் உடலைக் கைப்​பற்றி பிரேதப் பரிசோதனைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தற்​கொலை செய்து கொண்ட மாணவி திவ்யா சிறிது காலம் தோழிகளு​டன் கூட சரி​யாகப் பேசாமல் இருந்​துள்​ளார். எப்​போதும் தனிமையை விரும்​பி​யுள்​ளார். மேலும், அவர் மன அழுத்​தத்​தில் இருந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது.

எனவே, திருமண விவ​காரம் தொடர்​பாக பெற்​றோர் மீண்​டும் எதிர்ப்பு தெரி​வித்​தார்​களா? காதலருடன் ஏதேனும் கருத்து வேறு​பாடா? மருத்​து​வப் பணிச்​சுமை அல்​லது அழுத்​தம் காரண​மா? அல்​லது தற்​கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்​ள​தா?என்பன உட்பட பல்​வேறு கோணங்​களில் டி.பி. சத்​திரம் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். தற்​கொலை தடுப்பு உதவி எண் தற்​கொலை என்​பது எந்​தவொரு பிரச்​சினைக்​கும் தீர்வு இல்​லை.

தற்​கொலை செய்​து​கொள்​ளும் எண்​ணம் தோன்​றி​னால் உடனடி​யாக சினேகா தற்​கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000, மாநில தற்​கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் உதவி எண் - 022-25521111 ஆகிய​வற்​றுக்கு தொடர்பு கொள்​ளலாம்​. உரிய வழி​காட்​டல்​ வழங்​கப்​படும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x