Published : 06 Aug 2025 07:03 AM
Last Updated : 06 Aug 2025 07:03 AM

நாமக்கல் | 3 பெண் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை: நடந்தது என்ன?

கோவிந்தராஜ், பிரக்​திஷாஸ்ரீ, ரித்திகாஸ்ரீ, தேவாஸ்ரீ

நாமக்​கல்: கடன் தொல்லை காரண​மாக 3 பெண் குழந்​தைகளை வெட்​டிக் கொலை செய்​து​விட்டு தந்​தை​யும் தற்​கொலை செய்து கொண்​டார். நாமக்​கல் மாவட்​டம் ராசிபுரம் அடுத்த வேப்​பங்​க​வுண்​டன்​புதூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் கோவிந்​த​ராஜ் (36). ரிக் நிறு வனத்​தில் மேலா​ள​ராகப் பணிபுரிந்து வந்த இவர், விவ​சாய​மும் மேற்​கொண்டு வந்​தார். இவரது மனைவி பாரதி (26), மகள்​கள் பிரக்​திஷாஸ்ரீ (10), ரித்​தி​காஸ்ரீ (7), தேவாஸ்ரீ (6), மகன் அக்​னீஸ்​ வரன் (1).

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு 3 பெண் குழந்​தைகளும் கோவிந்​த​ராஜுடன் உறங்​கினர். மற்​றொரு அறை​யில் பார​தி, அக்​னீஸ்​வரனுடன் உறங்​கி​னார். நேற்று அதி​காலை குழந்​தைகளின் அலறல் சப்​தம் கேட்​டுள்​ளது. திடுக்​கிட்டு எழுந்த பாரதி அறை​யில் இருந்து வெளியே வர முற்​பட்​டுள்​ளார்.

ஆனால், அறைக் கதவு வெளியே தாழிடப்​பட்டு இருந்​தது. கதவை உடைத்​துக்​கொண்டு வெளியே வந்​த​போது 3 குழந்​தைகளும் கழுத்து அறுபட்ட நிலை​யில் இறந்து கிடந்​தன. கணவர் கோவிந்​த​ராஜ் வாயில் நுரை தள்​ளியபடி இறந்து கிடந்​துள்​ளார்.

தகவலறிந்து வந்த மங்​களபுரம் காவல் துறை​யினர் 4 பேரின் உடல்​களை​யும் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக நாமக்​கல் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்​கு அனுப்​பி​வைத்​தனர்.

விசா​ரணை​யில், கோவிந்​த​ராஜ் ரூ.20 லட்​சம் கடனை கட்ட முடி​யாத விரக்​தி​யில் பெண் குழந்​தைகளை கொலை செய்​து​விட்​டு, தானும் விஷமருந்தி தற்​கொலை செய்து கொண்​டது தெரிய​வந்​தது. இது தொடர்​பாக மங்​களபுரம் போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x