Published : 03 Aug 2025 07:03 AM
Last Updated : 03 Aug 2025 07:03 AM

கல்வராயன் மலைப் பகுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் கைது; தலைமை ஆசிரியர் தலைமறைவு

கள்ளக்குறிச்சி: கல்​வ​ராயன் மலைப் பகு​தி​யில் பள்ளி மாணவி​களுக்கு பாலியல் தொந்​தரவு கொடுத்​த​தாக 2 ஆசிரியர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் கல்​வ​ராயன் மலைப் பகு​தி​யில் உள்ள மணி​யார்​பாளை​யம் கிராமத்​தில் அரசு பழங்​குடி​யினர் உண்​டு, உறை​விட மேல்​நிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இங்கு500-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் பயின்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் மாணவி​களுக்கு பாலியல் தொந்​தரவு கொடுத்​த​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக மாவட்ட குழந்​தைகள் நல பாது​காப்பு அலு​வலர் இளை​ய​ராஜா நடத்​திய விசா​ரணை​யில், தலைமை ஆசிரியர் தனபால், இயற்​பியல் ஆசிரியர் ராஜவேல், பகு​திநேர ஆசிரியர் தேவேந்​திரன் ஆகியோர் மாணவி​களுக்கு பாலியல் தொந்​தரவு அளித்​தது உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்து தலைமை ஆசிரியர், இயற்​பியல் ஆசிரியரைபணி​யிடை நீக்​கம் செய்த மாவட்டபழங்​குடி​யினர் நலத் துறை அலு​வலர் அண்​ணாதுரை, பகுதி நேரஆசிரியரை பணிநீக்கம் செய்​தார். இச்​சம்​பவம் தொடர்​பாக காவல்துறை​யில் புகார் அளித்த நிலை​யில், கள்​ளக்​குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, தனபால், தேவேந்​திரன், ராஜவேல் ஆகிய 3 பேர் மீது போக்சோ பிரி​வின் கீழ் வழக்கு பதிவு செய்​தனர். தொடர்ந்து தேவேந்​திரன், ராஜவேல் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். மேலும், தலைமறை​வாக உள்ள தலைமை ஆசிரியர் தனபாலை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x