Published : 01 Aug 2025 06:41 AM
Last Updated : 01 Aug 2025 06:41 AM

தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்த கணவன் - மனைவி கைது

பிரபு இன்பதாஸ், கீர்த்தனா

சென்னை: தொழில் தொடங்க குறைந்த வட்​டி​யில் கடன் பெற்​றுத் தரு​வ​தாக ரூ.16 லட்​சம் மோசடி செய்​த​தாக கணவன், மனைவி கைது செய்​யப்​பட்​டனர். சென்னை கீழ்ப்​பாக்​கம், பூந்​தமல்லி நெடுஞ்​சாலை​யில் வசித்து வருபவர் அழகு​பாண்​டியன் (29). பல்​வேறு வகை​யான வீட்டு உபயோகப் பொருட்​களை விற்​பனை செய்​யும் பிரபல தனி​யார் நிறு​வனம் ஒன்​றின் கீழ்ப்​பாக்​கம் பகுதி விநி​யோகஸ்​த​ராக உள்​ளார்.

இவருக்கு முகநூல் மூலம் தாம்​பரம் அருகே முடிச்​சூர் வரத​ராஜபுரத்​தைச் சேர்ந்த கீர்த்​தனா (30) மற்​றும் அவரது கணவர் பிரபு இன்​ப​தாஸ் (44) அறி​முக​மாகினர். இவர்​கள் தங்​களுக்கு உயர் அரசு அதி​காரி​கள் மற்​றும் செல்​வாக்கு மிகுந்த நபர்​கள்பலரை தெரி​யும் என்று தெரி​வித்​தனர்.

இதை உண்மை என நம்​பிய அழகு​ பாண்​டியன், தான் சொந்​த​மாக தொழில் தொடங்க முடிவு செய்​துள்​ள​தாக​வும் அதற்கு தேவையான பணத்​துக்கு கடன் வசதி ஏற்​பாடு செய்து கொடுக்க முடி​யு​மா? எனக் கேட்​டுள்​ளார். இதையடுத்​து, அவர்​கள் குறைந்த வட்​டி​யில் தொழில் கடன் பெற்​றுத் தரு​வ​தாக ஆசை வார்த்தை கூறி​யுள்​ளனர்.

இதற்கு கமிஷ​னாக கடந்த 2 ஆண்​டு​களாக பல தவணை​களாக மொத்​தம் ரூ.16 லட்​சம் பெற்​றுள்​ளனர். ஆனால், உறு​தி​யளித்​த​படி கடன் பெற்​றுக் கொடுக்​காத​தா​லும், கமிஷ​னாக பெற்ற பணத்தை திரும்ப கொடுக்​காத​தா​லும் அதிர்ச்சி அடைந்த அழகு​பாண்டியன், இது தொடர்​பாக கீழ்ப்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். இதில், அழகு​பாண்​டியன் அளித்த புகார் உண்மை என தெரிய​வந்​ததையடுத்​து, தலைமறை​வாக இருந்த பிரபு இன்​ப​தாஸ், அவரது மனைவி கீர்த்​தனா ஆகிய இரு​வரை​யும் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். பின்​னர் அவர்​களை நீதி​மன்​றக் காவலில் சிறை​யில் அடைத்​தனர். தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x