Published : 01 Aug 2025 05:22 AM
Last Updated : 01 Aug 2025 05:22 AM

சென்னை | சிறுதானிய உணவு சமைக்காத கோபத்தில் கணவர் அடித்ததில் மனைவி உயிரிழப்பு

சென்னை: சிறு​தானிய உணவு சமைக்​காத கோபத்தில் அடித்த​போது மனைவி உயி​ரிழந்த சம்​பவத்​தில் கணவர் மீது கொலை​யா​காத மரணம் என்ற பிரி​வின் கீழ் வழக்​கு பதி​யப்​பட்​டுள்​ளது. ராம​நாத​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த பெண் அருள்​மணி (45). சென்னை அரும்​பாக்​கம் ஜெய்நகர், 3-வது தெரு​வில் உள்ள பெண்​கள் விடு​தி​யில் வார்​ட​னாக பணி​யாற்றி அங்​கேயே தங்கிவந்​தார்.

இவரது கணவர் ராதாகிருஷ்ணன் (50) திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள டீக்​கடை ஒன்​றில் டீ மாஸ்​ட​ராக பணி​யாற்றி வரு​கிறார். அருள்​மணி மற்​றும் அவரது கணவர் ராதாகிருஷ்ணன் இரு​வருக்​குமே சர்க்​கரை நோய் பாதிப்பு இருந்​த​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் ராதாகிருஷ்ணன் நேற்று முன்​தினம் இரவுஉணவு கேட்​டுள்​ளார். அப்​போது அருள்​மணி `சாதம்​தான் இருக்​கிறது' எனக் கூறிய​போது, `எப்​போதும் சாதம்​தா​னா? சிறு​தானிய உணவு சமைக்க வேண்​டியது தானே' என ராதாகிருஷ்ணன் கேட்​டுள்​ளார்.

அப்​போது இரு​வருக்​குமிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது. ஆத்​திரமடைந்த ராதாகிருஷ்ணன், அருள்​மணி​யின் கன்​னத்​தில் ஓங்கி அறைந்​த​போது அவர் வலிப்பு ஏற்​பட்​டு, மயக்​கமடைந்து கீழே விழுந்​துள்​ளார். அவர் உடனடி​யாக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார்.

பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், அருள்​மணி ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாகத் தெரி​வித்​தனர். கோயம்​பேடு பேருந்து நிலைய போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். கொலை செய்​யும் நோக்​கம் இல்​லாமல் நடந்த சம்பவம் என்பதால் கொலை​யா​காத மரணம் என்ற பிரி​வின் கீழ் வழக்​குப் பதிந்து கணவர் ரா​தாகிருஷ்ணனை கைது செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x