Published : 01 Aug 2025 06:02 AM
Last Updated : 01 Aug 2025 06:02 AM

ஐ.டி. ஊழியர் கொலை வழக்கில் எஸ்.ஐ. கைது: சிபிசிஐடி போலீஸார் விசாரணை தொடக்கம்

உள்படம்: எஸ்.ஐ. சரவணன்

திருநெல்வேலி: ஐ.டி. ஊழியர் கவின் செல்​வ கணேஷ் கொலை வழக்​கில் காவல் உதவி ஆய்​வாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்​ளார். இந்த வழக்கு தொடர்​பாக சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளனர். தூத்​துக்​குடி மாவட்டம் ஆறு​முகமங்​கலம் பகு​தி​யைச் சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லையில் கொலை செய்​யப்​பட்​டார்.

இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித் என்​பவரை பாளை​யங்​கோட்டை போலீ​ஸார் கைது செய்​தனர். சுர்​ஜித்​தின் பெற்​றோ​ரான உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, சஸ்பெண்ட் செய்​யப்பட்​டு உள்​ளனர். அவர்​கள் இரு​வரை​யும் கைது செய்​தால் மட்​டுமே கவின் செல்​வ கணேஷின் உடலை வாங்கி அடக்கம் செய்​வோம் என அவரது உறவினர்​கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், இந்த வழக்கு தொடர்​பாக காவல் உதவி ஆய்​வாளர் சரவணனை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்​தர​விட்​டிருந்த நிலை​யில், சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளனர். இது தொடர்​பான ஆவணங்​களை​யும், பறி​முதல் செய்​யப்​பட்​டுள்ள செல்​போன், இருசக்கர வாக​னம், சிசிடிவி பதிவு​கள் ஆகிய​வற்​றை​யும், பாளை​யங்​கோட்டை போலீ​ஸார் சிபிசிஐடி போலீ​ஸாரிடம் ஒப்படைத்​தனர்.

சுபாஷினி​யின் வீடியோ... இதனிடையே, கவின் செல்​வ கணேஷ் காதலித்த சுபாஷினி​யின் தன்​னிலை விளக்க வீடியோ நேற்று வெளி​யாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. அந்த வீடியோ​வில் சுபாஷினி, “என்ன நடந்​தது என்​பது, எனக்​கும், கவினுக்​கும் மட்​டும்​தான் தெரி​யும். எங்​கள் தொடர்பு குறித்து யாரும் தவறாகப் பேச வேண்​டாம்.

உண்மை தெரி​யாமலும் பேச வேண்​டாம். எனது அப்​பா, அம்​மாவுக்​கும், இதற்​கும் எந்த சம்​பந்​த​மும் கிடை​யாது. அவர்​களை தண்டிக்க வேண்​டும் என்​பது தவறு. அவர்​களை விட்​டு​விடுங்​கள்” என்று தெரி​வித்​துள்​ளார். இந்த வீடியோ குறித்​தும் போலீ​ஸார் விசாரித்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x