Published : 31 Jul 2025 06:00 AM
Last Updated : 31 Jul 2025 06:00 AM

சென்னை கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம்: திமுக கவுன்சிலரின் பேரன் உட்பட 3 பேர் கைது

சந்துரு

சென்னை: கல்​லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்​யப்​பட்ட விவ​காரத்​தில், திமுக கவுன்​சிலர் தனசேகரனின் பேரன் உள்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை அயனாவரம், முத்​தம்​மன் தெரு​வைச் சேர்ந்​தவர் கல்​லூரி மாணவர் நிதின்​சாய் (21). இவர் கடந்த திங்​கள் இரவு 10.30 மணிக்​கு, தனது நண்​ப​ரான கல்​லூரி மாணவர் அபிஷேக் (20) உடன் திரு​மங்​கலம் பள்ளி சாலை வழி​யாக பைக்​கில் சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது, அந்த வழி​யாக அதிவேக​மாக வந்த சொகுசு கார் அபிஷேக் ஓட்டி சென்ற பைக் மீது மோதி விட்டு நிற்​காமல் சென்​றது. இதில், பின்​னால் அமர்ந்​திருந்த நிதின்​சாய் தூக்கி வீசப்​பட்டு சம்பவ இடத்​தில் இறந்​தார். அபிஷேக் படு​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். விசா​ரணை​யில், நிதின்​சா​யின் நண்​ப​ரான வெங்​கடேசன் என்​பவர் பிளஸ் 2 மாணவி ஒரு​வரை ஒருதலை​யாக காதலித்​துள்​ளார்.

ஆனால், இதை விரும்​பாத அந்த பெண் இதுபற்றி தனது ஆண் நண்​பர் பிரணவ் என்​பவரிடம் தெரி​வித்​துள்​ளார். இதை தொடர்ந்​து, வெங்​கடேசனை போனில் பிரணவ் திட்​டி​யுள்​ளார். அத்​துடன், பிரணவ் தனது கூட்​டாளி​களு​டன் சொகுசு காரில் சென்​று, மாணவி காதல் விவ​காரம் தொடர்​பாக நிதின்​சாய், வெங்​கடேசுடன் பேசினர்.

அப்​போது ஏற்​பட்ட மோதலில், காரில் வந்​தவர்​கள் வெங்​கடேசன் மீது திடீரென காரை ஏற்​றிய​தில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்​து, வெங்​கடேசன் தரப்​பினர் காரை சேதப்​படுத்தி உள்​ளனர். பின்​னர், நிதின்​சா​யும் அபிஷேக்​கும் பைக்​கில் வீட்​டுக்கு புறப்​பட்​டனர்.

சிறிது நேரத்​தில் மீண்​டும் அங்கு அதிவேக​மாக வந்த அதே சொகுசு கார் அபிஷேக், நிதின்​சாய் சென்ற பைக் மீது மோதி​யது. இதில் நிதின்​சாய் அதே இடத்தில் இறந்​தார். மாணவரை இடித்து தள்ளி கொலை செய்ய பயன்​படுத்​திய காரில், திமுக கவுன்சிலரும் மாநக​ராட்சி கணக்கு மற்​றும் தணிக்கை குழு தலை​வரு​மான கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்​துரு, சென்னை காவல் ஆய்​வாளர் ஒரு​வரது உறவினரும், வழக்​கறிஞரின் மகனு​மான ஆரோன் என்​பவரும் இருந்​துள்​ளனர்.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த கல்​லூரி மாணவர்​களான சந்​துரு, ஆரோன், யாஷ்​வின் ஆகிய 3 பேரும் திரு​மங்​கலம் போலீ​ஸாரிடம் சரண் அடைந்​தனர். அவர்களை போலீ​ஸார் கைது செய்​தனர். கைதான சந்​துரு கூறுகை​யில், ‘மாணவி விவ​காரம் தொடர்​பாக பேச பிரணவ் என்னை அழைத்​த​தின் பேரி்ல், நானும், ஆரோனும் காரில் விரைந்து சென்​றோம்.

அப்​போது, இரு தரப்​பினரிடையே மோதல் ஏற்​பட்டு கைகலப்​பாக மாறியது. அவர்​களை அச்​சுறுத்​தும் வகை​யில் அவர்​களது வாகனம் மீது இடித்​தோம். எதிர்​பா​ராத​வித​மாக ஒரு​வர் இறந்து விட்​டார். கொலை செய்​யும் நோக்​கத்​துடன் நாங்​கள்​ இடிக்​கவில்லை’’ என சந்​துரு ​வாக்​குமூல​மாக கூறிய​தாக போலீஸார்​ தெரிவித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x