Published : 31 Jul 2025 06:16 AM
Last Updated : 31 Jul 2025 06:16 AM

திருத்துறைப்பூண்டி பைனான்சியர் வீட்டில் கொள்ளை முயற்சி - மலேசியாவை சேர்ந்த 4 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

திருவாரூர்: ​திருத்​துறைப்​பூண்டி பைனான்​சி​யர் வீட்​டில் நேற்று முன்​தினம் முகமூடி அணிந்து கொள்ளை முயற்​சி​யில் ஈடு​பட்ட, மலேசி​யா​வைச் சேர்ந்த 4 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும் ஒரு​வரைத் தேடி வரு​கின்​றனர். திரு​வாரூர் மாவட்​டம் திருத்​துறைப்​பூண்டி காவல் நிலை​யம் அரு​கில் வசிப்​பவர் கார்த்​தி(46).

பைனான்​சி​யர். நேற்று முன்​தினம் இரவு இவரது வீட்​டின் ஓர் அறை​யில் கார்த்​தி​யும், மற்​றொரு அறை​யில் அவரது மனை​வி, 2 மகள்களும் தூங்கிக் கொண்​டிருந்​தனர். அப்​போது, வீட்​டுக்​குள் புகுந்த முகமூடி கொள்​ளை​யர்​கள் 3 பேர், கார்த்​தி​யின் மனை​வி, மகள்​களிடம் கத்​தி​யைக் காண்​பித்​து, நகைகளை கழற்​றித் தரு​மாறு மிரட்​டி​யுள்​ளனர்.

மனை​வி, மகள்​களின் கூச்​சலைக் கேட்டு எழுந்​துச் சென்ற கார்த்​தியை 3 பேரும் கத்​தி​யால் தாக்​கி​யுள்​ளனர். கார்த்​தி​யும் பதி​லுக்கு அவர்​களை தாக்​கியுள்ளார். இதனிடையே, சப்​தம் கேட்டு அக்​கம்​பக்​கத்​தினர் ஓடி வந்​த​போது, வாயி​லில் காத்​திருந்த மேலும் 2 கொள்​ளை​யர்​கள் தப்​பியோடி​விட்​டனர்.

பின்​னர், வீட்​டில் இருந்த 3 பேரை​யும் பிடித்​து, திருத்​துறைப்​பூண்டி போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர். விசா​ரணை​யில், அவர்​கள் மலேசி​யா​வைச் சேர்ந்த சரவணன் ​(44), இளவரசன்​(26), கோபி(30) என்​பது தெரிய​வந்​தது. இதை யடுத்து 3 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: கார்த்தி வீட்​டில் ஏற்​கெனவே தோட்ட வேலை பார்த்​து, பின்​னர் மலேசி​யா​வுக்கு வேலைக்குச் சென்​றவர் குமார் என்​கிற குமரன்​ (40). இவருக்கு மலேசிய குடி​யுரிமை பெற்ற சரவணன், இளவரசன், கோபி, விமலன்​(19) ஆகியோ​ருடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், பைனான்​சி​யர் கார்த்தி வீட்​டில் கொள்ளை அடிப்​ப​தற்​காக மலேசியாவில் இருந்து ஜூலை 13-ம் தேதி தன்​னுடன் 4 பேரை​யும் குமரன் அழைத்து வந்து திருச்​சி​யில் தங்க வைத்​துள்​ளார். பின்​னர், ஜூலை 26-ம் தேதி திருத்​துறைப்​பூண்​டிக்கு அழைத்து வந்​து, நண்​பர் வீட்​டில் தங்க வைத்​து, கார்த்​தி​யின் வீட்டை நோட்​ட​மிட்டுள்ளனர்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு கார்த்தி வீட்​டுக்​குச் சென்ற 5 பேரில், குமரன், விமலன் ஆகியோர் வீட்​டுக்கு வெளியே காவலுக்கு நிற்க, மற்ற 3 பேரும் வீட்​டுக்​குள் சென்​றுள்​ளனர்.ஆனால், கொள்ளை முயற்சி தோல்​வியடைந்​த​தால் 3 பேரும் சிக்​கிக் கொண்​டனர். தப்​பியோடிய குமரன், விமலன் ஆகியோரைத் தேடி வரு​கிறோம். இவ்​வாறு போலீ​ஸார் கூறினர். இதற்​கிடை​யில், விமலனை திருச்​சி​யில் போலீ​ஸார் கைது செய்​துள்​ள​தாகக் கூறப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x