Published : 31 Jul 2025 05:52 AM
Last Updated : 31 Jul 2025 05:52 AM

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்திருப்பதாக மிரட்டி தூத்துக்குடி மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் மோசடி

தூத்துக்குடி: சிபிஐ அதி​காரி என்று கூறி, ‘டிஜிட்​டல் அரெஸ்ட்’ செய்​திருப்​ப​தாக மிரட்டி மூதாட்​டி​யிடம் ரூ.50 லட்​சம் பறித்த ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். தூத்​துக்​குடி மாவட்​டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒரு​வரை மர்ம நபர்​கள் வாட்ஸ்​அப் காலில் தொடர்​பு​ கொண்​டு, தாங்​கள் சிபிஐ அதி​காரிகள் என்று கூறி​யுள்​ளனர். பின்​னர், “உங்​கள் ஆதார் கார்டு அடிப்படை​யில் மும்​பை​யில் வங்​கிக் கணக்கு உள்​ளது.

அதில், மனித கடத்​தல் வழக்​கில் ரூ.2 கோடி பண பரி​மாற்றம் நடந்​துள்​ளது. இதுதொடர்பாக உங்​கள் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. உங்​களை கைது செய்​யாமல் இருக்க ரூ.50 லட்​சம் தரவேண்​டும்” என்​று வற்​புறுத்​தி​யுள்​ளனர். இதனால் அச்​சமடைந்த மூதாட்​டி, ரூ.50 லட்​சத்தை அவர்​கள் கூறிய வங்​கிக் கணக்​குக்கு பணப் பரி​மாற்​றம் செய்​துள்​ளார்.

பின்​னர், தான் மோசடி செய்​யப்​பட்​டதை அறிந்த மூதாட்​டி, தேசிய குற்​றப்பதிவு இணை​யதளத்​தில் புகார் அளித்தார். இந்​தப் புகார் தொடர்​பாக தூத்​துக்​குடி சைபர் குற்​றப் பிரிவு ஏடிஎஸ்பி சகாய ஜோஸ் மேற்​பார்​வை​யில், ஆய்​வாளர் சாந்தி மற்​றும் போலீ​ஸார் விசா​ரணை நடத்தினர். இதில், மோசடி​யில் ஈடு​பட்​டது ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினம் பகுதி​யைச் சேர்ந்த பள்ளி பரமேஸ்​வர​ ராவ் (28), சுகந்​திபதி சந்​திரசேகர் (40), ஆடும்​சுமில்லி சிவ​ராம் பிர​சாத் (43) என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து சைபர் குற்​றப்​பிரிவு போலீ​ஸார் ஆந்​திரா சென்று 3 பேரை​யும் கைது செய்​தனர். பின்​னர் அவர்​கள் தூத்​துக்​குடி நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். அவர்களிடமிருந்து 6 செல்​போன்​கள், ஏடிஎம் கார்​டு​கள், வங்​கிக் கணக்கு அட்​டைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

புகார் அளிக்க... சிபிஜ, காவல் துறை, கஸ்​டம்ஸ் அதி​காரி​கள் என்று வாட்​ஸ்​அப்​பில் வீடியோ, ஆடியோ கால் மூலம் மக்​களை அச்​சுறுத்தி பணம் பறிக்​கும் மோசடிகள் அதி​கரித்து வருகின்​றன. எனவே, ​மக்​கள் இது​போன்ற அழைப்​பை துண்​டித்து​ விடவேண்டும். மேலும், சைபர் குற்​றப் பிரிவுக்கு 1930 என்ற கட்​ட​ணமில்லா எண் அல்​லது cybercrime.gov.in என்ற இணை​யதளத்​தில் புகார் அளிக்​கலாம் என்று தூத்​துக்​குடி காவல் கண்​காணிப்​பாளர் ஆல்​பர்ட் ஜான் தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x