Published : 30 Jul 2025 07:57 AM
Last Updated : 30 Jul 2025 07:57 AM

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ராஜு பிஸ்வகர்மாவை 4 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

திருவள்ளூர்: கும்​மிடிப்​பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் கைதான அசாம் இளைஞர் ராஜுபிஸ்​வகர்​மாவை 4 நாள் காவலில் விசா​ரிக்க திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் நேற்று போலீ​ஸாருக்கு அனு​மதி வழங்​கியது. மேலும், நீதி​மன்ற வளாகத்​தில் ராஜுபிஸ்​வகர்​மாவை வழக்​கறிஞர்​கள் தாக்க முயன்ற சம்​பவம், பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே ஆரம்​பாக்​கம் பகு​தியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12-ம் தேதி பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்​டார். இச்​சம்​பவம் தொடர்​பாக ஆரம்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்​தனர்.

இதையடுத்​து, தனிப்​படை​யினர், ஆந்​திர மாநிலம், சூளூர்​பேட்​டை​யில் தாபா ஒன்​றில் பணிபுரிந்து வந்த அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த ராஜு பிஸ்​வகர்மா (35) என்ற இளைஞரை கடந்த 26-ம் தேதி கைது செய்​தனர். அவரிடம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்​ளிட்ட காவல்​துறை அதி​காரி​கள் 20 மணி நேரத்​துக்கு மேலாக விசா​ரணை நடத்​தினர்.

பிறகு, ராஜு பிஸ்​வகர்மா திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி உமா மகேஷ்வரி முன் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, சென்​னை, புழல் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். தொடர்ந்​து, இந்த வழக்கு ஆரம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் இருந்​து, கும்​மிடிப்​பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டது.

இச்​சூழலில், புழல் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள ராஜு பிஸ்​வகர்​மாவை 7 நாள் காவலில் எடுத்து விசா​ரிக்க கும்​மிடிப்​பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார், நேற்று முன் தினம் திரு​வள்​ளூர் ஒருங்​கிணைந்த நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனு​தாக்​கல் செய்​தனர். அந்த மனு மீதான விசா​ரணை நேற்று திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது.

இந்த விசா​ரணைக்​காக, புழல் மத்​திய சிறை​யில் இருந்​து, முகத்தை மூடிய​வாறு ராஜுபிஸ்​வகர்மா பலத்த போலீஸ் பாது​காப்​புடன் திரு​வள்​ளூர் ஒருங்​கிணைந்த நீதி​மன்ற வளாகத்​துக்கு அழைத்து வரப்​பட்​டு, திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி உமாமகேஷ்வரி முன்பு ஆஜர்​படுத்​தப்​பட்​டார். அப்​போது, போலீ​ஸார் தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த நீதிபதி உமா மகேஷ்வரி, ராஜு பிஸ்​வகர்​மாவை 4 நாள் காவலில் விசா​ரிக்கபோலீ​ஸாருக்கு அனு​மதி வழங்​கி​னார்.

இதையடுத்​து, பலத்த போலீஸ் பாது​காப்​புடன் ராஜுபிஸ்​வகர்​மா, கும்​மிடிப்​பூண்டி பகு​திக்கு போலீ​ஸாரின் விசா​ரணைக்​காக அழைத்து செல்​லப்​பட்​டார். அப்​போது, ஒருங்​கிணைந்த நீதி​மன்ற வளாகத்​தில் வழக்​கறிஞர்​கள், ராஜு பிஸ்​வகர்​மாவை தாக்க முயன்​றனர். அவர்​களை, நீதி​மன்ற வளாகத்​தில் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த கும்​மிடிப்​பூண்டி மற்​றும் திரு​வள்​ளூர் டிஎஸ்​பிக்​கள் ஜெயஸ்ரீ, தமிழரசி ஆகியோர் தலை​மையி​லான சுமார் 50-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் தடுத்து நிறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x