Published : 30 Jul 2025 06:50 AM
Last Updated : 30 Jul 2025 06:50 AM

சென்னையில் கல்லூரி மாணவர் மீது காரை ஏற்றி படுகொலை: திமுக கவுன்சிலரின் பேரன் தலைமறைவு 

அபிஷேக், நிதின்​சாய்

சென்னை: பள்ளி மாணவி காதல் விவ​காரத்​தில் நண்​பருக்கு ஆதர​வாக வந்த கல்​லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். மற்​றொரு​வர் கவலைக்​கிட​மான முறை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். காரை ஓட்​டிய​தாக கூறப்​படும் திமுக கவுன்​சிலர் கே.கே.நகர் தனசேகரினின் பேரன் தலைமறை​வான​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

சென்னை அயனாவரம் முத்​தம்​மன் தெரு​வைச் சேர்ந்​தவர் நிதின்​சாய் (21). கல்​லூரி மாணவர். இவர் நேற்று முன்​தினம் இரவு 10.30 மணி அளவில் தனது நண்​ப​ரான கல்​லூரி மாணவர் அபிஷேக் (20) உடன் திரு​மங்​கலம் பள்ளி சாலை வழி​யாக பைக்​கில் சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது அந்த வழி​யாக அதிவேக​மாக வந்த சொகுசு கார் ஒன்று அபிஷேக் ஓட்டி சென்ற பைக் மீது மோதி​விட்டு நிற்​காமல் சென்​றது. இதில் பின்​னால் அமர்ந்​திருந்த நிதின்​சாய் தூக்கி வீசப்​பட்டு அதே இடத்​திலேயே உயி​ரிழந்தார். அபிஷேக் படு​கா​யங்​களு​டன்உயிருக்கு போராடினார்.

இதுகுறித்து திரு​மங்​கலம் போக்​கு​வரத்து புல​னாய்வு பிரிவு போலீ​ஸார் விசா​ரணை​யில் நடந்​தது விபத்து அல்ல. திட்​ட​மிட்ட கொலை என தெரிய​வந்​தது. பள்ளி மாண​வியை காதலிப்​பது சம்​பந்​த​மாக இரு தரப்​பினருக்கு இடையே ஏற்​பட்ட பிரச்​சினை​தான் கொலைக்​கான காரணம் என்​பது தெரிய​வந்​தது.

நிதின்​சா​யின் நண்​ப​ரான வெங்​கடேசன் என்​பவர் பிளஸ் 2 மாணவி ஒரு​வரை ஒருதலை​யாக காதலித்​துள்​ளார். ஆனால், இதை விரும்​பாத அந்த பெண் இதுபற்றி தனது ஆண் நண்​ப​ரான பிரணவ் என்​பவரிடம் தெரி​வித்​துள்​ளார்.

இதை தொடர்ந்து வெங்​கடேசனை போனில் பிரணவ் திட்​டி​யுள்​ளார். இந்​தச் சூழலில் நிதின்​சாய், அபிஷேக் மற்​றும் வெங்​கடேசன் ஆகியோர் மற்​றொரு நண்​ப​ரான மோக​னின் பிறந்த நாளை கொண்​டாட திரு​மங்​கலத்​தில் உள்ள ஒரு ஹோட்​டலுக்கு வந்​துள்​ளனர். இதையறிந்த பிரணவ் தனது கூட்​டாளி​களு​டன் சொகுசு காரில் வந்​து, மாணவி காதல் விவ​காரம் தொடர்​பாக பேசும்போது மோதல் ஏற்​பட்​டது.

இதில் காரில் வந்​தவர்​கள் வெங்​கடேசன் மீது திடீரென காரை ஏற்​றிய​தில் அவருக்கு காலில் காயம் ஏற்​பட்​ட​தாக தெரி​கிறது. இதையடுத்து வெங்​க டேசன் தரப்​பினர் கார் கண்​ணாடியை உடைத்​ததுடன், நம்​பர் பிளேட்​டை​யும் சேதப்​படுத்​தி​யுள்​ளனர். பின்னர் நிதின்​சா​யும் அபிஷேக்​கும் பைக்​கில் வீட்​டுக்கு புறப்​பட்​டனர்.

சிறிது நேரத்​தில் மீண்​டும் அங்கு அதிவேக​மாக வந்த அதே சொகுசு கார் திடீரென அபிஷேக், நிதின்​சாய் பைக் மீது பயங்​கர​மாக மோதி​யது. இதில் நிதின்​சாய் இறந்​துள்​ளார். இதைதொடர்ந்து இந்த வழக்கு விசா​ரணை திரு​மங்​கலம் சட்​டம் - ஒழுங்கு பிரிவு போலீ​ஸாருக்கு மாற்​றப்​பட்​டது.

இந்​நிலை​யில் காரை ஒட்டி இளைஞரைக் கொன்​றது திமுக கவுன்​சிலரும் மாநக​ராட்சி கணக்கு மற்​றும் தணிக்கை குழு தலைவருமான கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்​துரு என நிதின்​சாய் பெற்​றோர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர். மேலும் அந்த நபர் காரில் வந்து பஞ்​சா​யத்து பேசி​ய​ போது​தான் மோதல் ஏற்​பட்​ட​தாக நிதின்​சா​யின் நண்​பர்​கள் போலீ​ஸாரிடம் தெரிவித்​துள்​ளனர்.

சந்​துரு தற்​போது தலைமறை​வாகி​விட்​ட​தாக தெரிகிறது. இதையடுத்​து, குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளான பிரணவ் அவரது நண்பர்களுடன் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்​. வெங்​கடேசனிட​மும் வி​சா​ரிக்கப்படுகிறது. காயம் அடைந்த அபிஷேக் கார் ஏற்றியது குறித்து போலீஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x